பதிவு செய்த நாள்
31 ஆக2012
23:45
புதுடில்லி: நடப்பு 2012-13ம் நிதியாண்டில், டை அம்மோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி), மியூரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி) உள்ளிட்ட ரசாயன உர வகைகளுக்கான தேவை அதிகரிக்கும் என, மத்திய உரத் துறை இணையமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜெனா, பார்லிமென்டில் தெரிவித்தார்.இதன்படி, நடப்பு நிதியாண்டில், டீ.ஏ.பி., மற்றும் எம்.ஓ.பி., ஆகியவற்றிற்கான தேவை, முறையே 1.33 கோடி டன் மற்றும் 51 லட்சம் டன்னாக இருக்கும். மேலும், இதன் இறக்குமதி முறையே, 91 லட்சம் டன் மற்றும் 50 லட்சம் டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மதிப்பீட்டு நிதியாண்டில், யூரியா உரத்திற்கான தேவை, 3.20 கோடி டன்னாகவும், இதன் இறக்குமதி, 90 லட்சம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.எம்.ஓ.பி., உரத்திற்கான தேவை முழுவதையும், நம் நாடு, இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்கிறது. மேலும், நாட்டின் டீ.ஏ.பி., மற்றும் யூரியா ஆகிய உரங்களுக்கான மொத்த தேவையில், முறையே 90 சதவீதம் மற்றும் 20 சதவீதம், இறக்குமதி வாயிலாக ஈடுசெய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாதங்களில், நம்நாட்டில், 14.20 லட்சம் டன் யூரியாவையும், 14.30 லட்சம் டன் டீ.ஏ.பி.,யையும், 8.28 லட்சம் டன் எம்.ஓ.பி உரத்தையும் இறக்குமதி செய்து கொண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|