பருத்தி உற்பத்தி  7 சதவீதம் குறையும் பருத்தி உற்பத்தி 7 சதவீதம் குறையும் ... நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதம் உயர்வு நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில்பொருளாதார வளர்ச்சி 5.5 சதவீதம் உயர்வு ...
ரசாயன உரத்திற்கான தேவை அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2012
23:45

புதுடில்லி: நடப்பு 2012-13ம் நிதியாண்டில், டை அம்மோனியம் பாஸ்பேட் (டீ.ஏ.பி), மியூரேட் ஆப் பொட்டாஷ் (எம்.ஓ.பி) உள்ளிட்ட ரசாயன உர வகைகளுக்கான தேவை அதிகரிக்கும் என, மத்திய உரத் துறை இணையமைச்சர் ஸ்ரீகாந்த் குமார் ஜெனா, பார்லிமென்டில் தெரிவித்தார்.இதன்படி, நடப்பு நிதியாண்டில், டீ.ஏ.பி., மற்றும் எம்.ஓ.பி., ஆகியவற்றிற்கான தேவை, முறையே 1.33 கோடி டன் மற்றும் 51 லட்சம் டன்னாக இருக்கும். மேலும், இதன் இறக்குமதி முறையே, 91 லட்சம் டன் மற்றும் 50 லட்சம் டன்னாக இருக்கும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், மதிப்பீட்டு நிதியாண்டில், யூரியா உரத்திற்கான தேவை, 3.20 கோடி டன்னாகவும், இதன் இறக்குமதி, 90 லட்சம் டன்னாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.எம்.ஓ.பி., உரத்திற்கான தேவை முழுவதையும், நம் நாடு, இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்து கொள்கிறது. மேலும், நாட்டின் டீ.ஏ.பி., மற்றும் யூரியா ஆகிய உரங்களுக்கான மொத்த தேவையில், முறையே 90 சதவீதம் மற்றும் 20 சதவீதம், இறக்குமதி வாயிலாக ஈடுசெய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.நடப்பு நிதியாண்டின், முதல் நான்கு மாதங்களில், நம்நாட்டில், 14.20 லட்சம் டன் யூரியாவையும், 14.30 லட்சம் டன் டீ.ஏ.பி.,யையும், 8.28 லட்சம் டன் எம்.ஓ.பி உரத்தையும் இறக்குமதி செய்து கொண்டுள்ளது.



Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)