பதிவு செய்த நாள்
03 செப்2012
00:17
புதுடில்லி:உள்நாட்டில், தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள், கடந்த 2009-10 முதல் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு வரை, மத்திய அரசுக்கு, உரிமக் கட்டணமாக, 28,837 கோடி ரூபாயை செலுத்தியுள்ளன என, மத்திய அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
மதிப்பீட்டு காலத்தில், ஏர்டெல் நிறுவனம், உரிமக் கட்டணமாக, 8,182 கோடி ரூபாயை செலுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, வோடபோன் (5,572 கோடி ரூபாய்), ஐடியா செல்லுலார் (2,800 கோடி ரூபாய்), பீ.எஸ்.என்.எல்., (4,504 கோடி ரூபாய்), எம்.டி.என்.எல்., (988 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் உரிமக் கட்டணத்தை செலுத்தியுள்ளன.கணக்கீட்டு காலத்தில், ஜி.எஸ்.எம்., தொழில்நுட்பத்தில் சேவை வழங்கும் நிறுவனங்கள் செலுத்திய உரிமத் தொகை, 11,477 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.
சி.டி.எம்.ஏ., தொழில்நுட்ப சேவை நிறுவனங்கள், செலுத்திய உரிமக் கட்டணம், 1,183 கோடி ரூபாய் என்ற அளவில் உள்ளது.நடப்பு முழு நிதியாண்டில், தொலை தொடர்பு சேவைக்கான உரிமக் கட்டணம் வாயிலாக, 12,660 கோடி ரூபாய் வசூலாகும் என, எதிர்பார்க்கப்படுவதாக, கபில் சிபல் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|