பதிவு செய்த நாள்
03 செப்2012
00:07
புதுடில்லி:விமான எரிபொருள் விலை, 7.6 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதையடுத்து, முன் எப்போதும் இல்லாத அளவாக இதன் விலை மிகவும் அதிகரித்துள்ளது.
இதன்படி, டில்லியில், ஒரு கிலோலிட்டர் (1,000 லிட்டர்) விமான எரிபொருளின் விலை, 5,146 ரூபாய் உயர்த்தப்பட்டு, 72,282 ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும், மும்பையில் இதன் விலை, 68,103 ரூபாயிலிருந்து, 72, 831 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவற்றால் விமான எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விமான எரிபொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. விமான நிறுவனங்களின் மொத்த செயல்பாட்டு செலவினத்தில், எரிபொருளுக்கான செலவினம் 40 சதவீதம் என்ற அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|