பதிவு செய்த நாள்
03 செப்2012
15:21
கார்களுக்கு வாழ்நாள் வரி விதிப்பு முறையை கொண்டுவர இருப்பதாக மேற்குவங்க அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்று முதல் இந்த புதிய முறை அமலுக்கு வருகிறது. மேற்கு வங்கத்தில் கார் வாங்கும் வாடிக்கையாளர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வரி செலுத்தும் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ஒரு முறை வரி செலுத்தும் முறையில் கார் வாங்கும்போது அதிக தொகையை வாடிக்கையாளர்கள் முதலீடு செய்ய வேண்டியிருக்காது. இந்த நிலையில், வரி வருவாயை பெரும் கார் வாங்கும்போதே வாடிக்கையாளர்கள் இனி மொத்தமாக வரி செலுத்த வேண்டும் என்று மேற்குவங்க அரசு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநில அரசுக்கு வரி வருவாய் கணிசமாக உயரும் என தெரிகிறது. இந்த புதிய முறைக்கு கார் டீலர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கார் கடன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு முன்பணமாக செலுத்தும் தொகை அதிகரிக்கும் என்பதால் கார் விற்பனையில் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காரின் விலையில் 10 சதவீதத்தை வாழ்நாள் வரியாக செலுத்த வேண்டியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|