பதிவு செய்த நாள்
03 செப்2012
23:43
புதுடில்லி: உள்நாட்டில் பருத்தி மற்றும் பருத்தி நூலிழைகளின் விலை உயர்ந்துள்ளதால்,வரி இல்லாமல் நூலிழை இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு, அனுமதி அளிக்க வேண்டும் என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு (ஏ.இ.பி.சி.,) கோரிக்கை விடுத்துள்ளது.ஆயத்த ஆடைகள்இது குறித்து, ஏ.இ.பி.சி.,அமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களில் பருத்தி விலை,3-5 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. நூலிழை விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே, மத்திய அரசு, நூலிழை இறக்குமதி மீதான, 10 சதவீத இறக்குமதி தீர்வையை முற்றிலுமாக விலக்கி கொள்ள வேண்டும்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், ஆடைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் காமன்வெல்த் குடியரசு நாடுகளில், பருத்தி நூலிழை விலை, இந்தியாவை விட மிகவும் குறைவாக உள்ளது. எனவே, சர்வதேச நாடுகளின் போட்டியை எதிர்கொள்ள, நூலிழை மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்கும் வகையில், அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்நாட்டில் பருத்தி நூலிழைக்கான தேவை தற்போது, 260 கோடி கிலோவாக உள்ளது. இது, 320 கோடி கிலோவாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,- செப்.,), உள்நாட்டில் பருத்தி நூலிழை உற்பத்தி 350 கோடி கிலோவாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 100 கோடி கிலோவிற்கும் அதிகமாக ஏற்றுமதியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேவைஇந்நிலையில், தேவையை பூர்த்தி செய்ய, பருத்தி நூலிழைகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. பருத்தி நூலிழையின் விலை உயராத வகையிலும், ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல், நூலிழை கிடைக்கும் வகையில் மத்திய அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சக்திவேல் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|