எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.560 கோடி இழப்பு எண்ணெய் நிறுவனங்களுக்கு நாளொன்றுக்கு ரூ.560 கோடி இழப்பு ... நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில்...ஏற்றுமதி ரூ.1.23 லட்சம் கோடி ரூபாயாக சரிவு நடப்பு ஆண்டு ஜூலை மாதத்தில்...ஏற்றுமதி ரூ.1.23 லட்சம் கோடி ரூபாயாக சரிவு ...
நூலிழை இறக்குமதி வரியை நீக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 செப்
2012
23:43

புதுடில்லி: உள்நாட்டில் பருத்தி மற்றும் பருத்தி நூலிழைகளின் விலை உயர்ந்துள்ளதால்,வரி இல்லாமல் நூலிழை இறக்குமதி செய்து கொள்ள மத்திய அரசு, அனுமதி அளிக்க வேண்டும் என, ஆடைகள் ஏற்றுமதி மேம்பாட்டு குழு (ஏ.இ.பி.சி.,) கோரிக்கை விடுத்துள்ளது.ஆயத்த ஆடைகள்இது குறித்து, ஏ.இ.பி.சி.,அமைப்பின் தலைவர் ஏ.சக்திவேல் கூறியதாவது:கடந்த இரண்டு மாதங்களில் பருத்தி விலை,3-5 சதவீத அளவிற்கு உயர்ந்துள்ளது. நூலிழை விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், ஆயத்த ஆடைகள் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதி நிறுவனங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. எனவே, மத்திய அரசு, நூலிழை இறக்குமதி மீதான, 10 சதவீத இறக்குமதி தீர்வையை முற்றிலுமாக விலக்கி கொள்ள வேண்டும்.உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், ஆடைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் மற்றும் காமன்வெல்த் குடியரசு நாடுகளில், பருத்தி நூலிழை விலை, இந்தியாவை விட மிகவும் குறைவாக உள்ளது. எனவே, சர்வதேச நாடுகளின் போட்டியை எதிர்கொள்ள, நூலிழை மீதான இறக்குமதி வரியை முற்றிலுமாக நீக்கும் வகையில், அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். உள்நாட்டில் பருத்தி நூலிழைக்கான தேவை தற்போது, 260 கோடி கிலோவாக உள்ளது. இது, 320 கோடி கிலோவாக அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு 2011-12ம் சந்தைப்படுத்தும் பருவத்தில் (அக்.,- செப்.,), உள்நாட்டில் பருத்தி நூலிழை உற்பத்தி 350 கோடி கிலோவாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், 100 கோடி கிலோவிற்கும் அதிகமாக ஏற்றுமதியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தேவைஇந்நிலையில், தேவையை பூர்த்தி செய்ய, பருத்தி நூலிழைகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது. பருத்தி நூலிழையின் விலை உயராத வகையிலும், ஆடை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கைத்தறி நெசவாளர்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல், நூலிழை கிடைக்கும் வகையில் மத்திய அரசு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு சக்திவேல் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)