பதிவு செய்த நாள்
06 செப்2012
10:04
புதுடில்லி: அமெரிக்கா செல்லும் இந்தியர்கள், விசா பெறுவதற்கான நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.டில்லியில் உள்ள அமெரிக்க தூதரக அதிகாரி, ஜூலியா ஸ்டான்லி கூறியதாவது:அமெரிக்கா செல்வதற்காக விண்ணப்பிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு, தற்போது, விசா பெறுவதற்காக உள்ள நடைமுறைகளில், மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, விசாவுக்கான விண்ணப்பக் கட்டணத்தை, "எலெக்ட்ரானிக் பண்ட் டிரான்ஸ்பர்' முறையின் மூலமாகவோ, மொபைல்போன் மூலமாகவோ, செலுத்தலாம். விசா கோரி விண்ணப்பிப்போரின் ஆவணங்களை பெறுவதற்காக, நாட்டில், 33 இடங்களில், அலுவலகங்கள் அமைக்கப்படும். ஆன்-லைன் மூலமாகவோ, மொபைல்போன் மூலமாகவோ தொடர்பு கொண்டு, முன் கூட்டியே அனுமதி பெற்று, அதிகாரிகளை சந்திக்கலாம்.மொபைல்போன் மூலமாக தொடர்பு கொள்ளும்போது, விசா நடைமுறைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள, "கால் சென்டர்'களை தொடர்பு கொண்டு, ஆங்கிலம், இந்தி, பஞ்சாபி, குஜராத்தி, தெலுங்கு ஆகிய மொழிகளில், தகவல்களை பெறலாம். விசா பெறுவதற்காக, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் ஆவணங்களை சேகரிப்பதால், எந்த பிரச்னையும் ஏற்படாத வகையில், நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த புதிய நடைமுறை, இம்மாதம், 26லிருந்து அமலுக்கு வரும்.இவ்வாறு, ஜூலியா ஸ்டான்லி கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|