பதிவு செய்த நாள்
06 செப்2012
13:56
புதுடில்லி: ஏ.டி.எஃப். எனப்படும் விமான எரிபொருள் விலை அதிகரிப்பால் முன்னணி நிறுவனங்கள் பயண கட்டணங்களை கணிசமாக உயர்த்தியுள்ளன. உள்நாட்டு சேவையில் விமான பயண கட்டணம் ரூ.150 முதல் ரூ.250 வரையிலும், சர்வதேச வழித்தடங்களில் ஒரு வழிப்பயணத்தில் கட்டணம் ரூ.825 உயர்ந்துள்ளது.பொதுத் துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய நிறுவனங்கள் விமான எரிபொருள் விலையை செப்டம்பர் 1ம் தேதி 7.6 சதவீதம் அதிகரித்தன. ஜுலை மாதத்திலிருந்து தற்போது வரை நான்காவது முறை யாக விமான பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ஆயிரம் லிட்டர் (ஒரு கிலோ லிட்டர்) விமான எரிபொருள் விலை தற்போது ரூ.72,282 என்ற அளவில் உள்ளது. கடந்த ஜுலை மாதத்தில், ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உள்நாட்டு சேவையில் விமான பயணிகள் எண்ணிக்கை 10 சதவீதம் சரிவடைந்து 45.40 லட்சமாக குறைந்துள்ளது. இது, 2011 ஜுலையில் 50.40 லட்சமாக இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|