பதிவு செய்த நாள்
12 செப்2012
00:30
மும்பை:பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படும் என்ற நிலைப்பாட்டால், நாட்டின் பங்கு வர்த்தகம் செவ்வாய்கிழமையன்று ஓரளவிற்கு நன்கு இருந்தது. பொதுத் துறையைச் சேர்ந்த ஐ.ஓ.சி., எச்.பி.சி., மற்றும் பீ.பி.சி.எல்., ஆகிய எண்ணெய் நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்து காணப்பட்டது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், மோட்டார் வாகனம், உலோகம் ஆகியவை தவிர்த்து, ஏனைய அனைத்து துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள், அதிக விலைக்கு கைமாறின.மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 86.17 புள்ளிகள் அதிகரித்து, 17,852.95 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே, இப்பங்குச் சந்தையின் குறியீட்டு எண், அதிகபட்சமாக, 17,867.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 17,677.38 புள்ளிகள் வரையிலும் சென்றது.
'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், 17 நிறுவனப் பங்குகளின் விலை அதிகரித்தும், 13 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 26.55 புள்ளிகள் உயர்ந்து, 5,390 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,393.35 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,332.10 புள்ளிகள் வரையிலும் சென்றது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|