பதிவு செய்த நாள்
13 செப்2012
15:49
இத்தாலி நாட்டை சேர்ந்த ஃபியட் கார் நிறுவனத்துக்கு, இந்தியாவில் எப்போதும் வரவேற்பு உண்டு. 1990ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவை சேர்ந்த பிரிமியர் நிறுவனத்துடன் இணைந்து, ஃபியட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், வினியோகம் மற்றும் சர்வீஸ்களுக்கான ஒப்பந்தம் போட்டு, ஃபியட் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. "லினியா' மற்றும்," கிராண்டி புன்டோ' ஆகிய மாடல் கார்களை விற்பனை செய்ய துவங்கியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஷோரூம்களில் இந்த கார்கள் விற்பனை செய்யப்பட்டன. அந்த நிறுவனத்தின் சர்வீஸ் ஸ்டேஷன்களில், ஃபியட் கார்களின் சர்வீஸ் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஃபியட் கார்கள் விற்பனையில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு துவக்கத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை, ஃபியட் நிறுவனம் முடித்து கொண்டது. இதன் பிறகு, இந்தியா முழுவதும், தனிப்பட்ட டீலர்கள், சர்வீஸ் சென்டர்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், ஃபியட் நிறுவனம், "ஃபியட் கஃபே' என்ற பெயரில், டீலர்ஷிப்களை அமைத்து வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக, மஹாராஷ்டிராவின் புனே நகரில், ஃபியட் நிறுவனத்தின் முதல் சர்வீஸ் சென்டர், 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், நாடு முழுவதும் இதுபோல, 100 சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்களை ஏற்படுத்த, ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|