தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.72 குறைவு ... சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி ரூ.2.09 லட்சம் கோடி சென்ற ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி ரூ.2.09 லட்சம் கோடி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பியட் நிறுவனத்தின் முதல் சர்வீஸ் சென்டர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 செப்
2012
15:49

இத்தாலி நாட்டை சேர்ந்த ஃபியட் கார் நிறுவனத்துக்கு, இந்தியாவில் எப்போதும் வரவேற்பு உண்டு. 1990ம் ஆண்டுகளுக்கு முன்பு வரை, இந்தியாவை சேர்ந்த பிரிமியர் நிறுவனத்துடன் இணைந்து, ஃபியட் நிறுவனம் செயல்பட்டு வந்தது. பின்னர் இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்தது.
அடுத்த சில ஆண்டுகளுக்கு பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடன், வினியோகம் மற்றும் சர்வீஸ்களுக்கான ஒப்பந்தம் போட்டு, ஃபியட் நிறுவனம் மீண்டும் இந்தியாவில் காலடி எடுத்து வைத்தது. "லினியா' மற்றும்," கிராண்டி புன்டோ' ஆகிய மாடல் கார்களை விற்பனை செய்ய துவங்கியது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஷோரூம்களில் இந்த கார்கள் விற்பனை செய்யப்பட்டன. அந்த நிறுவனத்தின் சர்வீஸ் ஸ்டேஷன்களில், ஃபியட் கார்களின் சர்வீஸ் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம், ஃபியட் கார்கள் விற்பனையில் அதிக ஆர்வம் காட்டவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து, இந்த ஆண்டு துவக்கத்தில், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை, ஃபியட் நிறுவனம் முடித்து கொண்டது. இதன் பிறகு, இந்தியா முழுவதும், தனிப்பட்ட டீலர்கள், சர்வீஸ் சென்டர்களை அமைக்க முடிவு செய்யப்பட்டது. அந்த வகையில், ஃபியட் நிறுவனம், "ஃபியட் கஃபே' என்ற பெயரில், டீலர்ஷிப்களை அமைத்து வருகிறது.
இதன் அடுத்த கட்டமாக, மஹாராஷ்டிராவின் புனே நகரில், ஃபியட் நிறுவனத்தின் முதல் சர்வீஸ் சென்டர், 20,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில், நாடு முழுவதும் இதுபோல, 100 சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்களை ஏற்படுத்த, ஃபியட் இந்தியா ஆட்டோமொபைல்ஸ் லிமிடெட் நிறுவனம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)