சிமென்ட் விலையை உயர்த்த திட்டம்சிமென்ட் விலையை உயர்த்த திட்டம் ... பருத்தி ஏற்றுமதியில் நிலையான கொள்கை தேவை:மத்திய அரசுக்கு வலியுறுத்தல் பருத்தி ஏற்றுமதியில் நிலையான கொள்கை தேவை:மத்திய அரசுக்கு வலியுறுத்தல் ...
முந்திரி விவசாயிகளின் அடுத்த கவலை:போர்வெல் திட்டம் அமல் எப்போது?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 செப்
2012
01:06

கடலூர்:"தானே' புயலில் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகள், மானியத்துடன் கூடிய போர்வெல் அமைக்கும் திட்ட அமலுக்காக காத்திருக்கின்றனர்.கடலூர் மாவட்டத்தில், "தானே புயலின் அ”ர @வகத்தால் தோட்டக்கலைப் பயிர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகின. மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் முந்திரி, பலா மரங்கள் அழிந்தன. முந்திரி கன்று வளர்க்க 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும்.
இந்நிலையில் அரசு, முந்திரி கன்று, சொட்டுநீர், உரம், மானியம் என உதவி செய்து விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது. இவையெல்லாம் இருந்தும் பல இடங்களில் தண்ணீர் பிரச்னை மிக முக்கியமானதாக உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீர் வசதியின்றி பராமரிக்கப்பட்டு வந்த இந்த முந்திரி காடுகள் தற்போது மீண்டும் கன்று வைத்து வளர்க்க அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.வறண்ட பகுதியாக இருந்த இந்த காடுகளில் பல லட்சம் செலவு செய்து போர்வெல் போட விவசாயிகள் முன்வரவில்லை. அதனால் அரசு மானிய உதவியுடன் விவசாயிகளின் கூட்டு முயற்சியால் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 4 முதல் 10 விவசாயிகள் அல்லது 20 முதல் 25 ஏக்கர் வரை பரப்புள்ள விவசாயிகள் கூட்டாக சேர்ந்து பயன்பெறலாம்.இதற்காக அரசு 70 சதவீத மானிய உதவியும், 15 ஏக்கருக்கு மேல் உள்ள தனி நபருக்கு 50 சதவீதம் மானிய உதவியுடன் ஆழ்துளை கிணறு அமைத்துக் கொள்ள திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவு இதுவரை வழங்காததால், காத்திருக்கும் விவசாயிகள் வரும் கோடை காலத்தில் முந்திரி கன்றுகளை சமாளிப்பது எப்படி என குழப்பத்தில் உள்ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)