பதிவு செய்த நாள்
17 செப்2012
01:06
கடலூர்:"தானே' புயலில் பாதிக்கப்பட்ட முந்திரி விவசாயிகள், மானியத்துடன் கூடிய போர்வெல் அமைக்கும் திட்ட அமலுக்காக காத்திருக்கின்றனர்.கடலூர் மாவட்டத்தில், "தானே புயலின் அ”ர @வகத்தால் தோட்டக்கலைப் பயிர்கள் கடும் பாதிப்பிற்குள்ளாகின. மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர் முந்திரி, பலா மரங்கள் அழிந்தன. முந்திரி கன்று வளர்க்க 5 முதல் 7 ஆண்டுகள் ஆகும்.
இந்நிலையில் அரசு, முந்திரி கன்று, சொட்டுநீர், உரம், மானியம் என உதவி செய்து விவசாயிகள் மத்தியில் நம்பிக்கை ஏற்படுத்தி வருகிறது. இவையெல்லாம் இருந்தும் பல இடங்களில் தண்ணீர் பிரச்னை மிக முக்கியமானதாக உள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக தண்ணீர் வசதியின்றி பராமரிக்கப்பட்டு வந்த இந்த முந்திரி காடுகள் தற்போது மீண்டும் கன்று வைத்து வளர்க்க அதிக தண்ணீர் தேவைப்படுகிறது.வறண்ட பகுதியாக இருந்த இந்த காடுகளில் பல லட்சம் செலவு செய்து போர்வெல் போட விவசாயிகள் முன்வரவில்லை. அதனால் அரசு மானிய உதவியுடன் விவசாயிகளின் கூட்டு முயற்சியால் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வசதி ஏற்படுத்திக் கொடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 4 முதல் 10 விவசாயிகள் அல்லது 20 முதல் 25 ஏக்கர் வரை பரப்புள்ள விவசாயிகள் கூட்டாக சேர்ந்து பயன்பெறலாம்.இதற்காக அரசு 70 சதவீத மானிய உதவியும், 15 ஏக்கருக்கு மேல் உள்ள தனி நபருக்கு 50 சதவீதம் மானிய உதவியுடன் ஆழ்துளை கிணறு அமைத்துக் கொள்ள திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது.இதற்கான உத்தரவு இதுவரை வழங்காததால், காத்திருக்கும் விவசாயிகள் வரும் கோடை காலத்தில் முந்திரி கன்றுகளை சமாளிப்பது எப்படி என குழப்பத்தில் உள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|