பதிவு செய்த நாள்
18 செப்2012
04:25
மும்பை: முன்கூட்டிய வரி செலுத்திய முதல், 100 நிறுவனங்களில், மும்பையைச் சேர்ந்த நிறுவனங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், 10 சதவீதம் அதிகரித்துள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் (ஆர்.ஐ.எல்.,), செலுத்திய முன்கூட்டிய வரி, 15 சதவீதம் சரிவடைந்தும் கூட, மும்பை நிறுவனங்களே முதலிடத்தை பிடித்துள்ளன.இதன்படி, செப்டம்பர் காலாண்டிற்காக, ஆர்.ஐ.எல்., நிறுவனம் செலுத்திய முன்கூட்டிய வரி 1,530 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது, கடந்த ஆண்டு இதே காலாண்டில், 1,800 கோடி ரூபாயாக அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா செலுத்திய வரி, 1,650 கோடியிலிருந்து, 1,820 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம் செலுத்திய முன்கூட்டி வரியும் 600 கோடியிலிருந்து, 812 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.வருமான வரி சட்டத்தின்படி, நிறுவனங்கள் செலுத்தும் மொத்த முன்கூட்டிய வரியில், 15 சதவீதத்தை முதல் காலாண்டிலும், 30 சதவீதத்தை, முறையே இரண்டு மற்றும் மூன்றாவது காலாண்டிலும், 25 சதவீதத்தை நான்காவது காலாண்டிலும் செலுத்த வேண்டும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|