பதிவு செய்த நாள்
18 செப்2012
12:55
கோவை: "சில்லரை விற்பனையில் வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளித்துள்ளதால், 5400 கோடி ரூபாய் அளவுக்கு, முதலீடுகள் வர வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,' என, மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி பேசினார். தென்னிந்திய மில்கள் சங்கம் (சைமா) நடத்திய "டெக்ஸ்பின் - 2012' தலைமை செயல் அலுவலர்களின் ஐந்தாவது மாநாடு, கோவையில் நடைபெற்றது. இதில் பங்கேற்றபின், மத்திய பிரதமர் அலுவலகம் மற்றும் பென்ஷன் மக்கள் குறைதீர் துறை இணைஅமைச்சர் நாராயணசாமி, நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் மின் பற்றாக்குறையை தீர்க்க, கூடங்குளம் மின்சாரத்தை கூடுதலாக தருமாறு மாநில அரசு கோரியுள்ளது. இது, பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சில்லரை விற்பனையில் அந்நியமுதலீடுகளை அனுமதித்துள்ளதால், சில ஆண்டுகளில் 5,400 கோடி ரூபாய் அளவுக்கு, முதலீடுகள் வர வாய்ப்புள்ளது. அந்நிய முதலீட்டை அமல்படுத்த, சில மாநிலங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா போன்றவை, எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை அனுமதிப்பது, அந்தந்த மாநிலங்களின் விருப்பமாகும். இலங்கை தமிழர்களுக்கு உதவும் நோக்கில் இலங்கைக்கும்; இலங்கை தமிழர்களுக்கும், மத்திய அரசு நிதியுதவி செய்து வருகிறது. இந்தியாவின் யோசனைகளை கேட்டு, தமிழர்களுக்கு உதவிகளை செய்ய உறுதி அளித்திருப்பதால், ராஜபக்சேவின் வருகை அனுமதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|