நடப்பு நிதியாண்டில் நெல் உற்பத்தி குறைய வாய்ப்புநடப்பு நிதியாண்டில் நெல் உற்பத்தி குறைய வாய்ப்பு ... ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் நாட்டின் தொழில் துறை வளர்ச்சி காணும் ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் நாட்டின் தொழில் துறை வளர்ச்சி காணும் ...
இந்திய மருந்து சந்தை 13.7 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2012
05:40

புதுடில்லி:நாட்டின் மருந்து சந்தை சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 13.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, மருந்து சந்தை குறித்த ஆய்வு நிறுவனமான அயோஸ்ட் அவாஸ் தெரிவித்துள்ளது.இந்தியாவின் மருந்து சந்தை, 65,949 கோடி ரூபாயாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்த, 12 மாத காலத்தில், இத்துறையின் வளர்ச்சி 16.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது.மருந்து வகைகள்:நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நோய் எதிர்ப்பு
மருந்துகளின் விற்பனை வளர்ச்சி 23.4 சதவீதம் என்ற அளவிலும், ஆகஸ்ட் வரையிலான, 12 மாத காலத்தில், 30.9 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது. சுவாச நோய் தொடர்பான மருந்து விற்பனை, 7.3 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. இது, முந்தைய ஜூலை மாத விற்பனையை விட சற்று அதிகமாகும்.
வயிற்று நோய் தொடர்பான மருந்து விற்பனை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 18.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது.மலேரியா நோய்க்கான எதிர்ப்பு மருந்து விற்பனை, 37 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது. இவை தவிர, நரம்பு, இதயம் மற்றும் சரும நோய்களுக்கான மருந்து விற்பனை 12 -16 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. உடல் வளர்ச்சி தொடர்பான 'ஹார்மோன்' மருந்து விற்பனை 45 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.
உள்நாட்டில், சன்பார்மா, சைடஸ் கெடிலா மற்றும் மேன்கைன்ட் ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, 20 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. சந்தை பங்களிப்பு:மேலும், பன்னாட்டு நிறுவனங்களான, பைசர், கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 14 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.அதேசமயம், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ரான்பாக்ஸி லேபரட்டரீஸ், சிப்லா மற்றும் அபாட் ஆகிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி 7-8 சதவீதம் என்ற அளவில் இருந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)