பதிவு செய்த நாள்
19 செப்2012
05:40
புதுடில்லி:நாட்டின் மருந்து சந்தை சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 13.7 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளதாக, மருந்து சந்தை குறித்த ஆய்வு நிறுவனமான அயோஸ்ட் அவாஸ் தெரிவித்துள்ளது.இந்தியாவின் மருந்து சந்தை, 65,949 கோடி ரூபாயாக உள்ளது. ஆகஸ்ட் மாதத்துடன் நிறைவடைந்த, 12 மாத காலத்தில், இத்துறையின் வளர்ச்சி 16.9 சதவீதம் என்ற அளவில் இருந்தது.மருந்து வகைகள்:நடப்பு ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில், நோய் எதிர்ப்பு
மருந்துகளின் விற்பனை வளர்ச்சி 23.4 சதவீதம் என்ற அளவிலும், ஆகஸ்ட் வரையிலான, 12 மாத காலத்தில், 30.9 சதவீதம் என்ற அளவிலும் வளர்ச்சி கண்டுள்ளது. சுவாச நோய் தொடர்பான மருந்து விற்பனை, 7.3 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. இது, முந்தைய ஜூலை மாத விற்பனையை விட சற்று அதிகமாகும்.
வயிற்று நோய் தொடர்பான மருந்து விற்பனை, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 18.3 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது.மலேரியா நோய்க்கான எதிர்ப்பு மருந்து விற்பனை, 37 சதவீதம் என்ற அளவில் அதிகரித்திருந்தது. இவை தவிர, நரம்பு, இதயம் மற்றும் சரும நோய்களுக்கான மருந்து விற்பனை 12 -16 சதவீதம் என்ற அளவில் அதிகரித்துள்ளது. உடல் வளர்ச்சி தொடர்பான 'ஹார்மோன்' மருந்து விற்பனை 45 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.
உள்நாட்டில், சன்பார்மா, சைடஸ் கெடிலா மற்றும் மேன்கைன்ட் ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, 20 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி கண்டுள்ளது. சந்தை பங்களிப்பு:மேலும், பன்னாட்டு நிறுவனங்களான, பைசர், கிளாக்ஸோ ஸ்மித்கிளைன் ஆகிய நிறுவனங்களின் சந்தை பங்களிப்பு, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 14 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது.அதேசமயம், சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ரான்பாக்ஸி லேபரட்டரீஸ், சிப்லா மற்றும் அபாட் ஆகிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனை வளர்ச்சி 7-8 சதவீதம் என்ற அளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|