பதிவு செய்த நாள்
21 செப்2012
00:25
மும்பை: நடப்பாண்டின் இரண்டாவது காலாண்டில், நாட்டின் பிரின்டர், நகல் இயந்திரங்கள் (காப்பியர்) மற்றும் பன்முக பயன்பாட்டு சாதனங்கள் விற்பனை எண்ணிக்கை, 7.15 லட்சமாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், 7 சதவீதம் அதிகம் என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், இதே காலாண்டுகளில், இவற்றின் விற்பனை மதிப்பு, 35 சதவீதம் வளர்ச்சி கண்டு, 2,081 கோடி டாலராக (1.14 லட்சம் கோடி ரூபாய்) அதிகரித்துள்ளது.வங்கி, காப்பீடு, கல்வி மற்றும் அரசுத் துறை நிறுவனங்களில், பன்முக பயன்பாட்டு சாதனங்களுக்கான தேவை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என, கார்ட்னர் நிறுவனத்தின் அம்ரிதா சவுத்ரி தெரிவித்துள்ளார்.
மதிப்பீட்டு காலாண்டில், பிரின்டர்கள், காப்பியர் மற்றும் பன்முக பயன்பாட்டு சாதன விற்பனையில், 51.4 சதவீத சந்தை பங்களிப்புடன் எச்.பி., நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து,கேனான் (23 சதவீதம்), சாம்சங் ( 8.3 சதவீதம்),எப்சன் ( 8.1 சதவீதம்) ஆகியவை உள்ளன.இங்க்ஜெட் பிரின்டர் விற்பனை சந்தை, 7.2 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|