பதிவு செய்த நாள்
25 செப்2012
13:33
சமீபத்தில், டீஸல் விலை லிட்டருக்கு, ரூ.5 உயர்த்தப்பட்டது, கார் நிறுவனங்களுக்கு இடையே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த சில மாதங்களாக, உச்சத்தில் உள்ள டீஸல் கார்களின் விற்பனையில், இது பாதிப்பை ஏற்படுத்துமா என்று ஆய்வு நடத்தப்பட்டது. ஆனால், லிட்டருக்கு ஐந்து ரூபாய் உயர்த்தப்பட்டாலும், பெட்ரோல் காரை விட, டீஸல் கார் தான், தொடர்ந்து செலவு குறைவு என்ற நிலையை தக்க வைத்து கொண்டுள்ளது.
இந்த ஆய்வுக்கு, சிறிய கார்கள் மற்றும் நடுத்தர கார்கள் பயன்படுத்தப்பட்டன. லிட்டருக்கு, 14 கி.மீ., மைலேஜ் தரும் பெட்ரோல் கார் மற்றும், லிட்டருக்கு,19 கி.மீ., மைலேஜ் தரும் டீஸல் கார், இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதன்படி, பெட்ரோல் காரில், ஒரு கி.மீ., தூரம் செல்ல, ரூ.4.89 செலவானது. டீஸல் காருக்கு, ரூ.2.47 மட்டுமே செலவானது. இதன் மூலம், டீஸல் விலையில்,லிட்டருக்கு, ரூ.5 உயர்த்திய போதிலும், பெட்ரோல் காரை விட, டீஸல் கார் தான் செலவு குறைவு என்பது நிருபணமாகியுள்ளது.
எனினும், பெட்ரோல் காரை விட, டீஸல் கார், ரூ.1.2 லட்சம் விலை அதிகம். இத்தொகையை ஈடுகட்ட, முன்பு ஒரு கணக்கீடு பயன்படுத்தப்பட்டது. அதாவது, மாதம்தோறும் ஆயிரம் கி.மீ., தூரத்துக்கு, டீஸல் காரை இயக்கினால், மூன்றரை ஆண்டுகளில், அத்தொகை ஈடு செய்யப்பட்டு விடும். தற்போது, டீஸல் விலை உயர்வினால், இந்த கணக்கீடு, நான்கு ஆண்டுகள் மற்றும் ஒரு மாதம் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது. இதே போல, மாதம் தோறும், 2,000 கி.மீ., தூரத்துக்கு டீஸல் காரை இயக்கினால், முன்பு, ஒரு ஆண்டு மற்றும் ஒன்பது மாதங்களில், தொகையை ஈடு செய்து விட முடியும். தற்போது இது, இரண்டு ஆண்டுகள் மற்றும் சில நாட்கள் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலையில், இந்தியாவில் விற்பனையாகும் கார்களில், சரி பாதியளவு டீஸல் கார்கள் என்ற நிலை காணப்படுகிறது. டீஸல் கார்களுக்கு முன்பதிவு செய்தால், பல மாதங்களுக்கு பிறகே டெலிவரி செய்யப்படுகிறது. ஆனால், பெட்ரோல் கார்களுக்கு முன்பதிவு செய்தால், சலுகை விலையில் உடனடியாக டெலிவரியும் செய்யப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|