பதிவு செய்த நாள்
26 செப்2012
00:35
தமிழகத்தில், மிகவும் பின்தங்கிய பெரம்பலூர் மாவட்டத்தில், 200 ஏக்கர் பரப்பில், புதிய தோல் தொழிற்பேட்டை உருவாக உள்ளது. இங்கு அமைய உள்ள, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மூலம், 25 ஆயிரம் வேலை வாய்ப்பு கள் உருவாகும் என, "பிக்கி' அமைப்பின் தலைவர் (தமிழகம்) எம்.ரபீக் அகமது தெரிவித்தார்.
உற்பத்தி செலவு:இந்திய தோல் துறைக்கு கடும் போட்டியாக விளங்கி வந்த சீனாவில், உற்பத்திச் செலவு அதி கரிப்பு, கூலி உயர்வு போன்ற காரணங்களால்,தோல் பதனிடும் தொழில் நலிவடைந்துள்ளது. தோல் மற்றும் அது சார்ந்த பொருட்களின் விலை உயர்ந்துள்ளதால்,குறைந்த செலவில், அதிக அளவில் உற்பத்தி திறன் கொண்ட வெளிநாடுகளின் பக்கம், சீன இறக்குமதியாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
இதனால், சீனாவில் பல தோல் தொழிற்சாலைகள் மூடப்பட்டு வருகின்றன. அடுத்த 3-5 ஆண்டுகளுக்குள், சீனா வில், தோல் பதனிடுதல் மற்றும் அது சார்ந்த பெருவாரியான தொழிற்சாலைகள் மூடப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.
இதையடுத்து, சீனாவின் தோல் பொருட்களின் தேவையை சமாளிக்கும் விதத்தில், தமிழகத்தில், புதிய தோல் தொழிற்பேட்டை துவங்குவது அவசியம் என, இத்துறை சார்ந்தவர்கள் தெரிவித்தனர்.நாட்டின் ஒட்டு மொத்த தோல் ஏற்றுமதியில், தமிழகத்தின் பங்களிப்பு 40 சதவீதமாக உள்ளது. புதிய தோல் தொழிற்பேட்டை அமையும் பட்சத்தில், தமிழகத்தின் பங்களிப்பு மேலும் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதி யாண்டில், தோல் துறையின் ஏற்றுமதி வருவாய், 23 சதவீதம் வளர்ச்சி கண்டு, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை (470 கோடி டாலர்) விஞ்சி, 490 கோடி டாலராக உயர்ந்துள்ளது.
"எனினும், நடப்பு நிதியாண்டு, சவாலாக, எதிர்மறை வளர்ச்சியுடன் துவங்கியுள்ளது. ஆனால், நிதியாண்டின் கடைசிக்குள், 10 சதவீத வளர்ச்சி எட்டப்படும் என, எதிர்பார்க்கிறோம்' என்று அகமது ரபீக் மேலும் தெரிவித்தார். பெரம்பலூரில் 150 - 200 ஏக்கரில் அமைய உள்ள தோல் தொழிற்பேட்டைக்காக, தமிழக அரசு ஏற்கனவே 75 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. மீதி தொகையை, நிறுவனங்கள் வழங்கும்.
முதலீடு:இந்த தொழிற்பேட்டை, 1,000- 1,500 கோடி ரூபாய் வரை முதலீடுகளை ஈர்க்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது.இந்த தொழிற்பேட்டையில், தொழிற்சாலைகளை அமைக்க, தமிழக அரசு 60 சதவீதம் மானியம் வழங்கு வதால், நிறுவனங்களின் முதலீட்டுச் செலவினம் குறைவாகவே இருக்கும்.
தற்போது செயல்பட்டு வரும் தோல் தொழிற்சாலைகளுக்கு, விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள, போது மான நிலம் கிடைக்காத நிலை உள்ளது. மேலும், வேலை ஆட்கள் பற்றாக்குறையும், இத்தொழிலின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ளது.இதை கருத்தில் கொண்டு, பெரம்பலூரில் தோல் தொழிற்பேட்டை அமைக்க திட்டமிடப் பட்டுள்ளது. இங்கு, விவசாய நிலங்களோ, பெரிய தொழிற்சாலைகளோ இல்லை.
அதே சமயம், நிலத்தின் விலையும் குறைவாகவே உள்ளது. மேலும், இங்கு, 18-30 வயதிற்குட்பட்ட, 10 ஆயிரம் பேர், வேலைக்கு தயாராக உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.உள்ளுர் மக்கள், அரியலூர் சிமென்ட் ஆலைகளிலும், இரண்டு மணிநேரம் பயணம் செய்து, கோவை மற்றும் திருப்பூரில் உள்ள ஜவுளி ஆலைகளிலும் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில், அடுத்த, 2-3 ஆண்டுகளில் பெரம்பலூரில் அமைய உள்ள புதிய தோல் தொழிற்பேட்டை, மாவட்ட அளவில் 25 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தரும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
தனி அமைப்பு:புதிய தோல் தொழிற்பேட்டைக்காக, நிலம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பூர்வாங்க பணிகளை மேற்கொள்ள, தோல் நிறுவனங்களின் சார்பில், தனி அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்பட உள்ளது.தோல் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள 17 நிறுவனப் பிரதிநிதிகள் அடங்கிய குழு, பெரம்பலூர் மாவட்டத்தில் தோல் தொழிற் பேட்டை அமைப்பதற்கான ஆய்வை மேற்கொண்டது."தோல் தொழிற்பேட்டையில், பொதுவான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இருக்கும் என்பதால், தனிப்பட்ட நிறுவனங்களின் நடைமுறைச் செலவினம் குறையும்' என, ரபீக் அகமது மேலும் கூறினார்.
-பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து-
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|