பதிவு செய்த நாள்
27 செப்2012
00:23
புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ஆயில் அண்டு நேச்சுரல் காஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.,) அதன் மானியச் சுமை காரணமாக, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், மேற் கொள்ளும் விரிவாக்க திட்டங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் முதலீடு மேற்கொள்ளும் திட்டங்களுக்கான உள்வள நிதி ஆதாரங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போதுமானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
விரிவாக்க திட்டம்:நடப்பு நிதியாண்டின், இரண்டு காலாண்டுகள் முடிவடையும் நிலை யிலும், மானியச் சுமை பங்கீடு தொடர்பான கொள்கைகள் இன்னும் தெளிவுபடுத்தப் படவில்லை.நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில், இந்நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு, 20 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. எனவே, நடப்பு நிதியாண்டில், இந் நிறுவனம் விரிவாக்க திட்டங்களுக்காக 33,065 கோடி ரூபாயை செலவிடத் திட்டமிட்டிருந் தது.இந்நிலையில், மானியச் சுமை மற்றும் கச்சா எண்ணெய் மீதான வரி மிகவும் அதிமாக உள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது.
மேலும், மத்திய அரசு நிர்ணயம் செய்யும் விலையில், பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இதன் காரணமாக, இந் நிறுவனங்களுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. இதனை ஈடு செய்யும் வகையில், கடந்த நிதியாண்டில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் 45 ஆயிரம் கோடி ரூபாயை மேற்கண்ட நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கிஉள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும், 12,346 கோடி ரூபாயை ரொக்க மானியமாக வழங்கிஉள்ளது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் மீதான வரியும் உயர்ந்துள்ளதால், இரண்டாவது காலாண்டிலும், இந் நிறுவனத்தின் மானியச் சுமை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், இந்நிறுவனத்தின் விரிவாக் கத் திட்டங்கள் பாதிப்புஅடையும்.
குறுகியகால கடன்:இது குறித்து இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனத்தின் மொத்த கையிருப்பில், குறுகிய கால கடன்களுக்காக 4,500 கோடி ரூபாயும், விடுமுறைகால மற்றும் மருத்துவ பயன் பாட்டிற்காக 3,600 கோடி ரூபாயும் செலவிடப் பட உள்ளது. இதையடுத்து, ரொக்க கையிருப்பு 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும்.
இது, எதிர்கால விரிவாக்க திட்டங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்து வதற்கும் போது மான தாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.ஓ.என்.ஜி.சி., நிறுவனம், இது வரை வழங்கிய மானியத் தொகையை கொண்டு, ஒரு கோடிடன் கச்சா எண்ணெயை எளிதாக இறக்குமதி செய்து கொண்டிருக்க முடியும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|