தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.19 கோடி அலைபேசி வாடிக்கையாளர் எண்ணிக்கை 67.19 கோடி ...
மானிய சுமையால் ஓ.என்.ஜி.சி., விரிவாக்க பணிகள் பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
00:23

புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த ஆயில் அண்டு நேச்சுரல் காஸ் கார்ப்பரேஷன் (ஓ.என்.ஜி.சி.,) அதன் மானியச் சுமை காரணமாக, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், மேற் கொள்ளும் விரிவாக்க திட்டங்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், வெளிநாடுகளில் முதலீடு மேற்கொள்ளும் திட்டங்களுக்கான உள்வள நிதி ஆதாரங்கள், இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போதுமானதாக இருக்காது என்றும் தெரிவித்துள்ளது.
விரிவாக்க திட்டம்:நடப்பு நிதியாண்டின், இரண்டு காலாண்டுகள் முடிவடையும் நிலை யிலும், மானியச் சுமை பங்கீடு தொடர்பான கொள்கைகள் இன்னும் தெளிவுபடுத்தப் படவில்லை.நடப்பு நிதியாண்டின் தொடக்கத்தில், இந்நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு, 20 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. எனவே, நடப்பு நிதியாண்டில், இந் நிறுவனம் விரிவாக்க திட்டங்களுக்காக 33,065 கோடி ரூபாயை செலவிடத் திட்டமிட்டிருந் தது.இந்நிலையில், மானியச் சுமை மற்றும் கச்சா எண்ணெய் மீதான வரி மிகவும் அதிமாக உள்ளது. இதனால், இந்நிறுவனத்தின் ரொக்க கையிருப்பு வெகுவாக குறைந்துள்ளது.
மேலும், மத்திய அரசு நிர்ணயம் செய்யும் விலையில், பொதுத் துறையைச் சேர்ந்த எண்ணெயை சந்தைப்படுத்தும் நிறுவனங்கள், பெட்ரோலியப் பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இதன் காரணமாக, இந் நிறுவனங்களுக்கு அதிக இழப்பு ஏற்படுகிறது. இதனை ஈடு செய்யும் வகையில், கடந்த நிதியாண்டில், ஓ.என்.ஜி.சி., நிறுவனம் 45 ஆயிரம் கோடி ரூபாயை மேற்கண்ட நிறுவனங்களுக்கு மானியமாக வழங்கிஉள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிலும், 12,346 கோடி ரூபாயை ரொக்க மானியமாக வழங்கிஉள்ளது.
இந்நிலையில், கச்சா எண்ணெய் மீதான வரியும் உயர்ந்துள்ளதால், இரண்டாவது காலாண்டிலும், இந் நிறுவனத்தின் மானியச் சுமை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் படுகிறது. இதனால், இந்நிறுவனத்தின் விரிவாக் கத் திட்டங்கள் பாதிப்புஅடையும்.
குறுகியகால கடன்:இது குறித்து இந்நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: நிறுவனத்தின் மொத்த கையிருப்பில், குறுகிய கால கடன்களுக்காக 4,500 கோடி ரூபாயும், விடுமுறைகால மற்றும் மருத்துவ பயன் பாட்டிற்காக 3,600 கோடி ரூபாயும் செலவிடப் பட உள்ளது. இதையடுத்து, ரொக்க கையிருப்பு 12 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் குறைவாகவே இருக்கும்.
இது, எதிர்கால விரிவாக்க திட்டங்களுக்கும், வெளிநாட்டு நிறுவனங்களை கையகப்படுத்து வதற்கும் போது மான தாக இருக்காது. இவ்வாறு அவர் கூறினார்.ஓ.என்.ஜி.சி., நிறுவனம், இது வரை வழங்கிய மானியத் தொகையை கொண்டு, ஒரு கோடிடன் கச்சா எண்ணெயை எளிதாக இறக்குமதி செய்து கொண்டிருக்க முடியும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)