பதிவு செய்த நாள்
27 செப்2012
00:26
புதுடில்லி:சென்ற ஆகஸ்ட் மாதத்தில், ஜி.எஸ்.எம்., தொழில் நுட்பத்திலான, அலைபேசி சேவையை, பெற்ற வாடிக்கையாளர் எண்ணிக்கை, 71 லட்சம் குறைந்துஉள்ளது. இது, முந்தைய ஜூலை மாதத்தில், இணைந்த வாடிக்கையாளர் எண்ணிக்கையை விட, 1.05 சதவீதம் குறைவாகும்.இதையடுத்து, ஆகஸ்ட் மாதம் வரையிலுமாக, இச்சேவையை பெற்றுள்ள ஒட்டு மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 67.19 கோடியாக குறைந்து உள்ளது என, இந்திய அலைபேசி சேவை நிறுவனங்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில், சென்னை மாநகரில் தான், அதிக எண்ணிக்கையில், அதாவது, 1.07 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப அலைபேசி சேவையை பெற்றுள்ளனர்.மதிப்பீட்டு மாதத்தில், ஏர்செல் நிறுவனம், புதிதாக 7.90 லட்சம் வாடிக்கையாளர்களை இணைத்துக் கொண்டுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை, 6.60 கோடியாக அதிகரித்துள்ளது.சென்ற ஆகஸ்ட் மாதம் வரையிலுமாக, நாட்டின் மொத்த ஜி.எஸ்.எம்., தொழில்நுட்ப சேவையில், ஏர்டெல் நிறுவனம், 18.69 கோடி வாடிக்கையாளர்களுடன் முதலிடத்தில் உள்ளது.
இதைத்தொடர்ந்து, வோடபோன் இந்தியா நிறுவனத்தின் வாடிக்கையாளர் எண்ணிக்கை, 15.34 கோடியாக உள்ளது. இவ்விரு நிறுவனங்களையும் அடுத்து, ஐடியா செல்லுலார் (11.60 கோடி), பி.எஸ்.என்.எல்., (9.47 கோடி), யூனிநார் (4.21 கோடி), வீடியோகான் (40.80 லட்சம்) மற்றும் எம்.டி.என்.எல்., (51.20 லட்சம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|