பதிவு செய்த நாள்
27 செப்2012
00:29
சேலம்:தமிழகத்தில், கடந்த வாரம் வரை, ஏறுமுகத்தில் இருந்த எண்ணெய் விலை, பாமாயில் வரத்து காரணமாக, தற்போது, திடீரென சரிவடைந்துள்ளது.தீபாவளி பண்டிகை நெருங்குவதால், எண்ணெய் விலை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில், அதிக அளவில் இருப்பு வைத்த வியாபாரிகள், கலக்கம் அடைந்துள்ளனர்.
சீன நாடு:சீனா, பயோ டீசல் உற்பத்திக்கு, பாமாயில் பயன்படுத்துவதை திடீர் என, நிறுத்தி விட்டது. இதனால், இந்தோனேசியா, மலேசியா, நாடுகளில் இருந்து சீனாவிற்கான பாமாயில் ஏற்றுமதி நின்று போயுள்ளது. இதை யடுத்து, மலேசியா, இந்தோனேசியா நாடுகள், அதிக அளவில் இந்தியாவிற்கு பாமாயிலை ஏற்றுமதி செய்து வருகின்றன.
இதனால், தமிழகத்தில் பாமாயில் விலையில் திடீர் சரிவு ஏற்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, சமையலுக்கு பயன்படும் சூரியகாந்தி, கடலை எண்ணெய் ஆகியவற்றின் விலையும் சரிவு அடைந்துள்ளது.தமிழகத்தில், சில மாதங்களுக்கு முன்னர் வரை, எண்ணெய் வித்துக்களின் விளைச்சல் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. இத்துடன் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால், எண்ணெய் விலை உயரும் என்ற எதிர்பார்ப்பும் வியாபாரிகள் மத்தியில் இருந்து வந்தது.
இழப்பு:வழக்கத்துக்கு மாறாக, அதிக அளவில் எண்ணெயை இருப்பு வைத்த வியாபாரிகள், தற்போது அதிக இழப்பை சந்திக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.தமிழக சந்தைகளுக்கு பாமாயில் எண்ணெய் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து எண்ணெய் விலை, 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட டின்னுக்கு, 60 முதல், 120 ரூபாய் வரையும், லிட்டருக்கு, ஐந்து ரூபாய் வரையும், குறைந்துள்ளது.மேலும், 65 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பாமாயில், தற்போது 60 ரூபாயாக சரிந்துஉள்ளது. 975 - 1,025 ரூபாய் வரை விற்ற, ஒரு டின் பாமாயில், 850 - 890 ரூபாயாக வீழ்ச்சி கண்டுள்ளது.
சூரியகாந்தி மற்றும் கடலை எண்ணெய் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் சூரியகாந்தி எண்ணெய், 85 ரூபாயில் இருந்து 79 ரூபாயாக குறைந்துள்ளது.கடலை எண்ணெய் விலையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு லிட்டர் கடலை எண்ணெய் விலை, 120 ரூபாயில் இருந்து 116 ரூபாயாகவும், ஒரு டின், 1,800 ரூபாயில் இருந்து, 1,700 ரூபாயாகவும் சரிவடைந்துள்ளது. ஒரு டின் கடலை எண்ணெய் ரீபைன்ட் ஆயில், 2,070 ரூபாயில் இருந்து 1,980 ரூபாயாக குறைந்து உள்ளது.
இது குறித்து, சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த எண்ணெய் வியாபாரி சீனிவாசன் கூறியதாவது: தமிழகத் தில், சில மாதங்களாக, சூரியகாந்தி, நிலக்கடலை ஆகிய எண்ணெய் வித்துக்களின் விளைச்சல், எதிர்õர்த்த அளவு இல்லை. இதனால், எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.
சரிவு நிலை:பாமாயில் எண்ணெய்வரத்து அதிகரித்துள்ளதால், அனைத்து சமையல் எண்ணெய் விலையும் சரிவடைந்துள்ளன.எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள சரிவு நிலையால், அதிக அளவில் எண்ணெயை இருப்பு வைத்துஇருந்த வியாபாரிகளுக்கு அதிக அளவு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|