இந்திய பீ.பி.ஓ., துறையின் சந்தை மதிப்பு ரூ.6,930 கோடிஇந்திய பீ.பி.ஓ., துறையின் சந்தை மதிப்பு ரூ.6,930 கோடி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு  தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 குறைவு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி சுசூகி பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 செப்
2012
00:34

புதுடில்லி:மாருதி சுசூகி நிறுவன தொழிலாளர்களுக்கு, சராசரியாக மாதம் 18 ஆயிரம் ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளது. நிர்வாகத்திற்கும், தொழிற்சங்கங்களுக்கும் இடையே, கடந்த நான்கு மாதங்களில், 40 முறை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் முடிவில், ஊதிய உயர்வுக்கு, இரு தரப்பிற்கும் இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
ஒப்பந்தம்:உயர்த்தப்பட்ட ஊதியம், சென்ற ஏப்ரல் முதல் கணக்கிடப்பட்டு வழங்கப்பட உள்ளது. விரைவில் கையொப்பமாக உள்ள இந்த ஒப்பந்தப்படி, குட்காவுன் மற்றும் மானேசர் தொழிற்சாலையை சேர்ந்த அடித்தட்டு தொழிலாளர்களுக்கு கூட, சராசரியாக, தலா 15 ஆயிரம் ரூபாய் கூடுதலாக கிடைக்கும்.
மேலும், தொழில்நுட்ப பயிற்சியாளர்களுக்கான மூன்றாண்டு பயிற்சிக் காலம், இரண்டு ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் பெற்றோருக்கு, ஒரு லட்ச ரூபாய் வரையிலான மருத்துவ செலவில், 90 சதவீதத்தை நிறுவனம் ஏற்றுக் கொள்ளும். ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட செலவில், 80 சதவீத செலவை நிறுவனமே ஏற்கும். முன்னர், தொழிலாளர்களுடன் பெற்றோர் தங்கியிருந்தால் மட்டுமே இந்த சலுகை வழங்கப்பட்டு வந்தது.
தற்போது, பெற்றோர் தனித்திருந்தால் கூட, மருத்துவ செலவில் 80-90 சதவீதத்தை நிறுவனம் ஏற்க உள்ளது. குட்காவுன்இந்த ஒப்பந்தத்திற்கு, குட்காவுன் தொழிற்சங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், மானேசர் தொழிற்சாலையில், தொழிற்சங்கம் இல்லை என்பதால், தொழிலாளர்கள், தங்கள் கருத்துக்களை, மேலதிகாரி யிடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.அண்மையில், மானேசர் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தின் போது, ஏற்பட்ட வன்முறையில், உயரதிகாரி ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)