நடப்பு கரீப் பருவத்தில்...அரசின் நெல் கொள்முதல் 14 சதவீதம் உயரும்நடப்பு கரீப் பருவத்தில்...அரசின் நெல் கொள்முதல் 14 சதவீதம் உயரும் ... இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ...
மானியம் இல்லாத சிலிண்டர் விலை 750 ரூபாய்:எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2012
11:27

Getafபுதுடில்லி:நடப்பு நிதியாண்டில், அக்டோபர் முதல், 2013 மார்ச் வரையிலான, ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல், தேவைப்படுவோர் சிலிண்டர் ஒன்றுக்கு, 750 ரூபாய் செலுத்த வேண்டும்.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெருமளவு நஷ்டத்தைச் சந்தித்து வருவதால், சமையல் காஸ் சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் மானியத்தைக் குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. அதனால், "ஒரு வீட்டிற்கு, ஆண்டுக்கு ஆறு சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும். அதற்கு மேல் தேவைப்படுவோர், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், அவ்வப்போது நிர்ணயிக்கும், சந்தை விலையை கொடுத்து, காஸ் சிலிண்டர் வாங்கிக் கொள்ள வேண்டும்' என, சமீபத்தில் அறிவித்தது.
அதேநேரத்தில், "இந்த நிதியாண்டில், மீதமுள்ள ஆறு மாதங்களுக்கு, மூன்று சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில் வழங்கப்படும்' என்றும் தெரிவித்தது.அதனால், அக்டோபர் 1ம் தேதி முதல், 2013, மார்ச் 31 வரையிலான, ஆறு மாத காலத்தில், ஒவ்வொரு வீட்டிற்கும், மூன்று சமையல் காஸ் சிலிண்டர்கள் மட்டுமே, மானிய விலையில், அதாவது, 399 ரூபாய்க்கு வழங்கப்படும். அதற்குமேல், காஸ் சிலிண்டர் வாங்குவோர், 14.2 கிலோ எடை கொண்ட ஒரு காஸ் சிலிண்டருக்கு, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்துள்ள சந்தை விலையான, ரூ.756.50 செலுத்த வேண்டும்.
இந்த சந்தை விலையும், சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ற வகையில், மாதம் தோறும் மாறுபடும். அதே நேரத்தில், வர்த்தக பயன்பாட்டிற்கான, 19 கிலோ எடை கொண்ட, காஸ் சிலிண்டருக்கு, 1,334 ரூபாய் செலுத்த வேண்டும்.காங்கிரஸ் கட்சி ஆளும், சில மாநிலங்கள் மட்டும், "ஆண்டுக்கு ஒன்பது, சமையல் காஸ் சிலிண்டர்கள் மானிய விலையில் வழங்கப்படும்' என, அறிவித்துள்ளன. மத்திய அரசு அறிவித்துள்ள, ஆறு சிலிண்டர்கள் போக, மீதமுள்ள மூன்றுக்கான மானியத்தை, மாநில அரசுகளே வழங்கி விடும். பொதுமக்களின் நலன் கருதி, இந்த முடிவை எடுத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)