முட்டை விலை வீழ்ச்சிமுட்டை விலை வீழ்ச்சி ... இந்திய தரைவிரிப்புகளுக்கு அயல்நாடுகளில் வரவேற்பு இந்திய தரைவிரிப்புகளுக்கு அயல்நாடுகளில் வரவேற்பு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
"சென்செக்ஸ்' 19,000 புள்ளிகளை கடந்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 அக்
2012
01:15

மும்பை:நாட்டின் பங்கு வியாபாரம் வியாழக்கிழமையன்று மிகவும் நன்கு இருந்தது. மத்திய அரசு, மேலும் பல பொருளாதார சீர்திருந்த அறிவிப்புகளை வெளியிடும் என்ற நிலைப்பாட்டால், பங்கு சந்தைகளில் வர்த்தகம் சூடுபிடித்து காணப்பட்டது.
பொருளாதார வல்லுனர்களின் மதிப்பீடுகளை விஞ்சி, அமெரிக்காவில், வேலை வாய்ப்பு மற்றும் சேவை துறைகள் வளர்ச்சி கண்டுள்ளன என்ற அறிவிப்பால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளிலும், வர்த்தகம் விறுவிறுப்புடன் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.
நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், நுகர்வோர் சாதனங்கள், வங்கி, பொறி யியல் சாதனங்கள் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகள் அதிக விலைக்கு கை மாறின. இருப்பினும், தகவல் தொழில்நுட்பம், மருந்து, மோட்டார் வாகனம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு தேவை குறைந்து காணப்பட்டது.
மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது,188.46 புள்ளிகள் அதி கரித்து, 19,058.15 புள்ளிகளில் நிலைகொண்டது.வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 19,107.04 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 18,939.75 புள்ளிகள் வரையிலும் சென்றது."சென் செக்ஸ்' கணக்கிட உதவும் 30 நிறுவனங்களுள், பீ.எச்.இ.எல்., ஐ.சி.ஐ.சி.ஐ. பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப், எஸ்.பீ.ஐ., மாருதி உள்ளிட்ட 20 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், சிப்லா, மகிந்திரா அண்டு மகிந்திரா, பஜாஜ் ஆட்டோ, கோல் இந்தியா உள்ளிட்ட 10 நிறுவனப் பங்குகளின் விலை குறைந்தும் இருந்தன.
தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "நிப்டி' 56.35 புள்ளிகள் உயர்ந்து, 5,787.60 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தினிடையே, அதிகபட்சமாக 5,807.25 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக 5,751.35 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)