பதிவு செய்த நாள்
07 அக்2012
00:53
நாமக்கல்:முட்டை விலை, மேலும் 15 காசு குறைந்து, 3.40 காசுகளாக சரிவடைந்துள்ளது. நாமக்கல் மண்டலத்தில், 800க்கும் அதிகமான கோழிப்பண்ணைகள் உள்ளன. அவற்றின் மூலம், நாள்தோறும், மூன்று கோடி முட்டைகள் வீதம் உற்பத்தி செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், நாட்டின் பிற மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதுடன், வளைகுடா, ஆப்பிரிக்க உள்ளிட்ட நாடுகளுக்கும், அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.சமீப காலமாக, கோழித்தீவன மூலப் பொருட்களான, கம்பு, மக்காச்சோளம் உள்ளிட்டவற்றுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவற்றின் விலை கடுமையாக உயர்ந்தது. இது போன்ற காரணங்களால், முட்டை உற்பத்தி செலவு, நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.எனவே, கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில், முட்டை விலையை என்.இ.சி.சி., (தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு) தொடர்ந்து உயர்த்தி வந்தது.
அதிகபட்சமாக, செப்., 13ம் தேதி, முட்டை விலை 365 காசுகள் உயர்த்தப்பட்டது. இந்நிலையில், செப்., 24ம் தேதி, முட்டை விலை ஒரே நாளில், 10 காசுகள் வீதம் சரிவடைந்தது.இதே விலை இருவாரங்களுக்கு நீடித்த நிலையில், முட்டை உற்பத்தி செலவுக்கு இணையாக விற்பனை விலையும் உள்ளதால், இந்த விலை இறக்கம், கோழிப் பண்ணையாளர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.இதுகுறித்து, என்.இ.சி.சி., நாமக்கல் மண்டல சேர்மன் டாக்டர் செல்வராஜ் கூறுகையில், 'இந்தியாவின், வட மாநிலங்களில் அமாவாசை வரை, முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. எனவே, வட மாநிலங்களில், முட்டை பயன்பாடு குறைந்துள்ளது. இதனால், வட மாநிலம் முழுவதும் பரவலாக முட்டை விலை குறைக்கப்பட்டுள்ளது. இதனால், முட்டை விலை சரிவடைந்துள்ளது'என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|