புதிதாக 15 பசுமை விமான நிலையங்கள் அமைக்க திட்டம்புதிதாக 15 பசுமை விமான நிலையங்கள் அமைக்க திட்டம் ... பொது துறை நிறுவன பங்கு விற்பனைஇலக்கு எட்டப்படும்: நிதி அமைச்சர் பொது துறை நிறுவன பங்கு விற்பனைஇலக்கு எட்டப்படும்: நிதி அமைச்சர் ...
பொது - தனியார் பங்கேற்பு திட்டங்கள்: தமிழகம் முன்னிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2012
04:16

அகமதாபாத்:நாட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றும் திட்டங்களில், தமிழகம், முன்னணி மாநிலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது என, அசோசம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.அடிப்படை கட்டமைப்பு:இந்தியாவில், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலை, நகர்ப்புற மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய அடிப்படை கட்டமைப்பு துறைகளை, மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.
இவ்வகையில், நடப்பாண்டில், பொது மற்றும் தனியார் பங்கேற்புடன், நாடு தழுவிய அளவில், 78 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 81 நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொது மற்றும் தனியார் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும், அடிப்படை கட்டமைப்பு பணிகளில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் பங்களிப்பு, 20.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது.தற்போது, அரியானாவில், 66,800 கோடி ரூபாய் மதிப்பிலான, 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நாடு தழுவிய அளவில், பொது - தனியார் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களில், இம்மாநிலத்தின் பங்களிப்பு, 85 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆந்திராவில், 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு திட்டங்களும், மத்திய பிரதேசத்தில், 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகர்ப்புறம்:மேலும், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் முறையே, 1,400 கோடி மற்றும் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏழு மற்றும் 12 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில், 1,681 கோடி ரூபாய் மதிப்பிலான, ஆறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நாடு தழுவிய அளவில், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில், பொது மற்றும் தனியார் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் பணிகளில், தமிழகத்தின் பங்களிப்பு, 20.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது என, அசோசெம் தெரிவித்துள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)