பதிவு செய்த நாள்
09 அக்2012
04:16
அகமதாபாத்:நாட்டில், பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றும் திட்டங்களில், தமிழகம், முன்னணி மாநிலங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது என, அசோசம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.அடிப்படை கட்டமைப்பு:இந்தியாவில், விமான நிலையங்கள் மற்றும் நெடுஞ்சாலை, நகர்ப்புற மேம்பாடு போன்றவற்றை உள்ளடக்கிய அடிப்படை கட்டமைப்பு துறைகளை, மத்திய, மாநில அரசுகள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.
இவ்வகையில், நடப்பாண்டில், பொது மற்றும் தனியார் பங்கேற்புடன், நாடு தழுவிய அளவில், 78 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, 81 நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொது மற்றும் தனியார் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும், அடிப்படை கட்டமைப்பு பணிகளில், நகர்ப்புற மேம்பாட்டுத் துறையின் பங்களிப்பு, 20.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது.தற்போது, அரியானாவில், 66,800 கோடி ரூபாய் மதிப்பிலான, 12 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நாடு தழுவிய அளவில், பொது - தனியார் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் திட்டங்களில், இம்மாநிலத்தின் பங்களிப்பு, 85 சதவீதம் என்ற அளவில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, ஆந்திராவில், 2,700 கோடி ரூபாய் மதிப்பிலான ஏழு திட்டங்களும், மத்திய பிரதேசத்தில், 2,650 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்பது திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. நகர்ப்புறம்:மேலும், ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கம் மாநிலங்கள் முறையே, 1,400 கோடி மற்றும் 1,200 கோடி ரூபாய் மதிப்பிலான, ஏழு மற்றும் 12 திட்டங்களுக்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில், 1,681 கோடி ரூபாய் மதிப்பிலான, ஆறு நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதையடுத்து, நாடு தழுவிய அளவில், நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில், பொது மற்றும் தனியார் பங்கேற்புடன் மேற்கொள்ளப்படும் பணிகளில், தமிழகத்தின் பங்களிப்பு, 20.5 சதவீதம் என்ற அளவில் உள்ளது என, அசோசெம் தெரிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|