பதிவு செய்த நாள்
09 அக்2012
04:20
புதுடில்லி:சென்ற கரீப் பருவத்தில், நாட்டின் நெல் உற்பத்தி 8.56கோடி டன்னாக குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளதாக, இந்திய உணவு கழகத்தின் தலைவர் அமர் சிங் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:மத்திய அரசு, இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில அரசுகளின் முகமை அமைப்புகள் மூலம் உணவு தானியங்களை கொள்முதல் செய்து வருகிறது. சென்ற சந்தை பருவத்தில், 3.50 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இந்த இலக்கு ஏறக்குறைய எட்டப்பட்டு விட்டது.அண்மையில், நிறைவடைந்த கரீப் பருவத்தில், பருவ மழை பொய்த்ததால், நெல் உற்பத்தி, 6.5 சதவீதம் குறைந்து, 8.56 கோடி டன்னாகக் குறையும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.நடப்பு சந்தை பருவத்தில், 4 கோடி டன் நெல் கொள்முதல் செய்ய, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, சென்ற 1ம் தேதி முதல் இதுவரையிலுமாக, 5 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.பஞ்சாப், ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா, உத்தர பிரதேசம், தமிழகம், மேற்கு வங்கம்போன்ற மாநிலங்களில் தான் அதிக அளவில் நெல் கொள்முதல் செ#யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|