14 அன்னிய முதலீட்டுதிட்டங்களுக்கு அனுமதி14 அன்னிய முதலீட்டுதிட்டங்களுக்கு அனுமதி ... இந்திய ரூபாயின் மதிப்பு  உயர்வு இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சர்வதேச நிலவரங்களால் 'சென்செக்ஸ்' 229 புள்ளிகள் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 அக்
2012
04:24

மும்பை:நாட்டின் பங்கு வர்த்தகம் வாரத்தின் தொடக்க தினமான, திங்கட்கிழமையன்று மிகவும் மோசமாக இருந்தது. சர்வதேச நிலவரங்கள் சாதகமாக இல்லாததையடுத்து, இந்திய பங்குச் சந்தைகளில், வர்த்தகம் சுணக்கமாகவே இருந்தது. இந்நிலையில், லாப நோக்கம் கருதி, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்பனை செய்ததையடுத்து, கடந்த 10 நாட்களில் இல்லாத அளவாக, பங்கு வியாபாரம் சரிவைக் கண்டது.உலக வங்கி, கிழக்கு ஆசிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சியை குறைத்து மதிப்பீடு செய்துள்ளது.
மேலும், கடன் நெருக்கடி குறித்து, ஐரோப்பிய நாடுகளின் நிதி அமைச்சகர்கள் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது போன்றவற்றால், ஐரோப்பா மற்றும் இதர ஆசியப் பங்குச் சந்தைகளில், வர்த்தகம் மந்தமாக காணப்பட்டது. இதன் தாக்கம், இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்தது.நேற்று நடைபெற்ற பங்கு வியாபாரத்தில், ரியல் எஸ்டேட், எண்ணெய், எரிவாயு, பொறியியல் பொருட்கள், நுகர்வோர் சாதனங்கள் உள்ளிட்ட, பல துறைகளைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்து போனது.
இருப்பினும், ஆரோக்யபராமரிப்பு துறையைச் சேர்ந்த நிறுவனப் பங்குகளுக்கு ஓரளவிற்கு தேவை இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், வர்த்தகம் முடியும் போது, 229.48 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு, 18,708.98 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே, அதிகபட்சமாக, 18,969.19 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 18,684.40 புள்ளிகள் வரையிலும் சென்றது.'சென்செக்ஸ்' கணக்கிட உதவும், 30 நிறுவனங்களுள், ரிலையன்ஸ்,ஹிண்டால்கோ, பீ.எச்.இ.எல்., எல் அண்டு டி உள்ளிட்ட 22 நிறுவனப் பங்குகளின் விலை சரிவடைந்தும், சன்பார்மா, பார்தி ஏர்டெல், சிப்லா, ஜிந்தால் ஸ்டீல், ஐ.டி.சி., உள்ளிட்ட 8 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும் காணப்பட்டன.தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண், 'நிப்டி' 70.95 புள்ளிகள் குறைந்து, 5,676 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக, 5,751.85 புள்ளிகள் வரையிலும், குறைந்தபட்சமாக, 5,666.20 புள்ளிகள் வரையிலும் சென்றது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)