பதிவு செய்த நாள்
10 அக்2012
00:25
புதுடில்லி:நடப்பு நிதியாண்டின்,செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வேலை மாறுவோர் எண்ணிக்கை, 21 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது, முதலாவது காலண்டை விட, 4 சதவீதம் அதிகம் என, மை ஹையரிங்கிளப் டாட் காம் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக சம்பளம் மற்றும் பதவி உயர்வு ஆகியவையே, ஒரு நிறுவனத்தை விட்டு, மற்றொரு நிறுவனத்திற்கு செல்வதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
நாட்டில் உள்ள பல்வேறு துறைகளிலும், வேலை விட்டு வேலை மாறுவோர் எண்ணிக்கை இரட்டை இலக்க அளவில் உள்ளது. குறிப்பாக, வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகளில், வேலை மாறுவோர் எண்ணிக்கை, 26 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, தகவல் தொழில்நுட்பம் (25 சதவீதம்), விருந்தோம்பல் (22 சதவீதம்) மோட்டார் வாகன தயாரிப்பு (19 சதவீதம்), நுகர்பொருட்கள் (18 சதவீதம்) மற்றும் தொலைத் தொடர்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு (16 சதவீதம்) ஆகிய துறைகள் உள்ளன.
முக்கிய 10 நகரங்களில், 6,500க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில், வேலை விட்டு வேலை மாறும், 1 - 5 ஆண்டு அனுபவமுள்ளோரின் எண்ணிக்கை 32 சதவீதம் என்ற அளவில் உள்ளது.ஆனால், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பணி அனுபவம் கொண்டவர்கள் வேலை மாறுவது, 19 சதவீதம் என்ற அளவில்,குறைவாக உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், வேலை மாறுவோர் எண்ணிக்கையில், சென்னை 14 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், ஐதராபாத் (12 சதவீதம்), கோல்கட்டா (11 சதவீதம்) ஆகிய நகரங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|