சாம்சங் எஸ் 3 விலை குறைப்புசாம்சங் எஸ் 3 விலை குறைப்பு ... வேளாண் கடன் ரூ.1.36 லட்சம் கோடி வேளாண் கடன் ரூ.1.36 லட்சம் கோடி ...
வேலை மாறுவோர் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2012
00:25

புதுடில்லி:நடப்பு நிதியாண்டின்,செப்டம்பருடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில், வேலை மாறுவோர் எண்ணிக்கை, 21 சதவீதம் அதிகரித்து உள்ளது. இது, முதலாவது காலண்டை விட, 4 சதவீதம் அதிகம் என, மை ஹையரிங்கிளப் டாட் காம் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதிக சம்பளம் மற்றும் பதவி உயர்வு ஆகியவையே, ஒரு நிறுவனத்தை விட்டு, மற்றொரு நிறுவனத்திற்கு செல்வதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
நாட்டில் உள்ள பல்வேறு துறைகளிலும், வேலை விட்டு வேலை மாறுவோர் எண்ணிக்கை இரட்டை இலக்க அளவில் உள்ளது. குறிப்பாக, வங்கி மற்றும் நிதி சார்ந்த துறைகளில், வேலை மாறுவோர் எண்ணிக்கை, 26 சதவீதம் என்றளவில் மிகவும் அதிகரித்துள்ளது.
இதையடுத்து, தகவல் தொழில்நுட்பம் (25 சதவீதம்), விருந்தோம்பல் (22 சதவீதம்) மோட்டார் வாகன தயாரிப்பு (19 சதவீதம்), நுகர்பொருட்கள் (18 சதவீதம்) மற்றும் தொலைத் தொடர்பு மற்றும் அடிப்படை கட்டமைப்பு (16 சதவீதம்) ஆகிய துறைகள் உள்ளன.
முக்கிய 10 நகரங்களில், 6,500க்கும் மேற்பட்ட பணியாளர்களிடம் ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில், வேலை விட்டு வேலை மாறும், 1 - 5 ஆண்டு அனுபவமுள்ளோரின் எண்ணிக்கை 32 சதவீதம் என்ற அளவில் உள்ளது.ஆனால், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பணி அனுபவம் கொண்டவர்கள் வேலை மாறுவது, 19 சதவீதம் என்ற அளவில்,குறைவாக உள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், வேலை மாறுவோர் எண்ணிக்கையில், சென்னை 14 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், ஐதராபாத் (12 சதவீதம்), கோல்கட்டா (11 சதவீதம்) ஆகிய நகரங்கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)