பதிவு செய்த நாள்
10 அக்2012
00:54
புது டில்லி:நடப்பு 2012-13ம் நிதியாண்டின், சென்ற ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், மத்திய அரசு, விவசாயிகளுக்கு, 1.36 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வேளாண் கடன் வழங்கி உள்ளது.நடப்பு நிதி யாண்டில், 5.75 லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
சென்ற 2011-12ம் நிதியாண்டில், 4.75 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு, வேளாண் கடன் வழங்க, இலக்கு நிர்ண யிக்கப்பட்டு இருந்தது. இந்த இலக்கை விட,108 சதவீதம் அதிகமாக, அதாவது,5.11 லட்சம் கோடி ரூபாய் வேளாண் கடன் வழங்கப்பட்டது.
கடந்த 2006-07ம் ஆண்டு கரீப் பருவம் முதல், விவசாயிகளுக்கு,7 சதவீத வட்டியில், 3 லட்சம் ரூபாய் வரை வேளாண் கடன் வழங்கப்பட்டு வருகிறது.சென்ற 2009-10ம் நிதியாண்டு முதல்,வேளாண் கடனை, குறித்த காலத் தில் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு, 1சதவீதம் வட்டி குறைக்கப்பட்டு, 6 சதவீதமாக குறைக்கப்பட்டது. இது, 2010-11ம் நிதியாண்டில் 2 சதவீதமாகவும், 2011- 12ம் நிதியாண்டில், 3 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, கடனை, ஒழுங்காகச் செலுத்தும் விவசாயிக்கான வேளாண் கடனுக்கான வட்டி விகிதம் 4 சதவீத மாக உள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், வேளாண் துறை 2.8 சதவீத வளர்ச்சியை கண்டிருக்கும் என, மத் திய புள்ளியியல் அலுவலகம் மதிப்பிட்டுள்ளது.சென்ற, 11வது ஐந்தாண்டு திட்ட காலத்தில்(2007-12), வேளாண் துறையின் வளர்ச்சி, சராசரியாக 3.3 சதவீதமாக காணப்பட்டது.இது, ஒன்பதாவது ( 2.5 சதவீதம்) மற்றும் 10வது ஐந்தாண்டு திட்ட காலங்களை (2.4 சதவீதம்) விட, அதிகமாகும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|