தொடர்ந்து ஐந்து மாதங்களாக நாட்டின் ஏற்றுமதியில் சரிவு நிலைதொடர்ந்து ஐந்து மாதங்களாக நாட்டின் ஏற்றுமதியில் சரிவு நிலை ... ஏர் இந்தியா விமானதலைமையகம் இடம் மாற்றம் ஏர் இந்தியா விமானதலைமையகம் இடம் மாற்றம் ...
வங்கிகளின் வசூலாகாத கல்வி கடன் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 அக்
2012
01:28

கடந்த, 10 ஆண்டுகளாக, பொதுத் துறை வங்கிகள் வழங்கும் கல்விக் கடன் அதிகரித்து வருகிறது. அதேபோன்று, வசூலாகாத கல்விக் கடனும் உயர்ந்து வருகிறது. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களில், பொதுத் துறை வங்கிகள் வழங்கிய கல்விக் கடனில், 15 சதவீதத்திற்கு அதிகமான தொகை, வசூலாகாமல் உள்ளது.
வளர்ச்சி விகிதம்:கடந்த 2003-04 முதல் 2011-12ம் நிதியாண்டு வரை, பொதுத் துறை வங்கிகளின் கல்விக் கடன், ஒட்டுமொத்த அளவில், 35 சதவீத ஆண்டு வளர்ச்சி விகிதத்தை கண்டு வந்துள்ளது. இதே காலத்தில், வங்கித் துறையின் கடன் வளர்ச்சி, 23 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது."கல்விக் கடன் பிரிவின் வளர்ச்சியே, வங்கிகளின் சொத்து மதிப்பு குறைவதற்கும் வழி வகுத்துள்ளது' என, எஸ்பிரிட்டோ சான்டோ செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் ஆய்வாளர் சாய்கிரண் புலவர்த்தி தெரிவித்தார்.
பொதுவாகவே, கல்விக் கடன் என்பது, உத்தரவாதமற்றதாகவே வங்கித் துறையில் கருதப்படுகிறது. பட்டம் பயின்ற மாணவர்கள், துவக்கத்தில் குறைந்த ஊதியத்தையே பெறுகின்றனர். இதனால், அவர்கள் கல்விக் கடனுக்காக திரும்ப செலுத்தும் தொகையும் குறைவாக உள்ளது.
நிதி பற்றாக்குறை:இது, வங்கிகள் கல்விக் கடன் அளிப்பதற்கும், கடனை திரும்ப பெறுவதற்கும் உள்ள இடைவெளி யை அதிகமாக்கி, நிதிப்பற்றாக்குறைக்கு வழி வகுக்கிறது. கடந்த 2007-08ம் நிதியாண்டு நிலவரப்படி, வங்கிகள் வழங்கிய கல்விக் கடனில், மொத்த வசூலாகாத கடன், 2 சதவீதமாக இருந்தது. இது, சென்ற 2011-12ம் நிதியாண்டில், 6 சதவீதமாக உயர்ந்துள்ளது.
மத்திய அரசின், 2004-05ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் உரையில், நிதி அமைச்சர் ப.சிதம்பரம், வங்கிகளின் கல்விக் கடனை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சலுகைகளை அறிவித்தார். இதையடுத்து, வங்கிகள் கல்விக் கடன் வழங்குவதில் தீவிரம் காட்டி வந்தன.இந்த வகையில், அதிக அளவில் கல்விக் கடன் வழங்குவதில், தென்னிந்தியாவை சேர்ந்த தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய நான்கு மாநிலங்கள் முன்னணியில் உள்ளன.
நடப்பு 2012ம் ஆண்டு, மார்ச் கடைசி நிலவரப்படி, பொதுத் துறை வங்கிகளின் மொத்த கல்விக் கடனில், மேற்கண்ட நான்கு மாநிலங்களின் பங்களிப்பு 56 சதவீதமாக உள்ளது.தென்னிந்தியாவை சேர்ந்த, பெரும்பாலான பொதுத் துறை வங்கிகளின் மொத்த கடனில், கல்விக் கடன் அதிக பங்களிப்பைக் கொண்டுள்ளது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், தென்மாநிலங்களை சேர்ந்த பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடனில், கல்விக் கடன், 2.55 சதவீதமாக இருந்தது.
அதே சமயம், இந்திய அளவில், பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடனில், ஒட்டுமொத்த கல்விக் கடன், சராசரியாக 1.17 சதவீதம் என்ற அளவிற்கே உள்ளது.கடந்த சில மாதங்களாக, கல்விக் கடன் பிரிவின் சொத்து மதிப்பு குறித்து, பல வங்கிகள் கவலை தெரிவித்து வருகின்றன. அதே சமயம், வங்கிகள் கல்விக் கடன் வழங்க, மறுக்கும் வங்கிகள் குறித்த புகாரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
மாநில அரசுகள்:இதையடுத்து, வங்கிகள் மற்றும் கல்விக் கடன் பெறுவோர் சந்திக்கும் பிரச்னைகள் குறித்தும், அவற்றுக்கான தீர்வுகள் பற்றியும் மத்திய, மாநில அரசுகளுடன் ரிசர்வ் வங்கி ஆலோசனை நடத்தி வருகிறது.
மாணவர்கள் சுலபமாக கல்விக் கடன் பெறும் வகையில், வட்டிச் சலுகை, கடன் உறுதி திட்டம் போன்ற நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. த்திட்டங்களால், தென்னிந்தியாவை சேர்ந்த இந்தியன் பேங்க், இந்தியன் ஓவர்சீஸ் பேங்க், ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஆந்திரா பேங்க், கனரா பேங்க் மற்றும் ஸ்டேட் பேங்க் ஆப் மைசூர் ஆகிய வங்கிகள், மிகப் பெரிய அளவில் பயனடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)