சர்க்கரை ஏற்றுமதி ஓராண்டிற்கு நீட்டிப்புசர்க்கரை ஏற்றுமதி ஓராண்டிற்கு நீட்டிப்பு ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு   தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு ...
நாட்டின் பணவீக்கம் 7.81 சதவீதமாக அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2012
00:21

புதுடில்லி: சென்ற செப்டம்பர் மாதத்தில், நாட்டின் பணவீக்கம், 7.81 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆகஸ்ட் மாதத்தில், 7.55 சதவீதமாக சற்று குறைந்திருந்தது.கோதுமை, முக்கிய தானியங்கள், டீசல் போன்றவற்றின் விலை அதிகரித்ததை அடுத்து, மொத்த விலை குறியீட்டு எண் அடிப்படையில் கணக்கிடப்படும், நாட்டின் பொது பணவீக்கம், சென்ற செப்டம்பரில் அதிகரித்துள்ளது.
இருப்பினும், கடந்த ஆண்டு, செப்டம்பர் மாதத்தில், இது, 10 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.நாட்டின், தொழில் துறை உற்பத்தி, மிகவும் மந்தமாக உள்ளது. இதனால், ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வேண்டும் என, தொழில் துறையினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், பணவீக்கம் அதிகரித்துஉள்ளதால், ரிசர்வ் வங்கி, வரும் 30ம் தேதி, அதன் ஆய்வறிக்கையில், வட்டி விகிதத்தை குறைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.சென்ற செப்டம்பர் மாதத்தில், உணவு பொருட்கள் பிரிவில், கோதுமை விலை, 18.63 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது, ஆகஸ்ட் மாதத்தில், 12.85 சதவீதம் என்ற அளவில் குறைந்திருந்தது. மேலும், முக்கிய உணவு தானியங்களின் விலையும், சென்ற செப்டம்பரில், 14.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஆகஸ்ட் மாதத்தில், 10.7 சதவீதம் என்ற அளவில் காணப்பட்டது. மத்திய அரசு, எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் இழப்பை ஈடுகட்டும் வகையில், சென்ற செப்., 13ம் தேதி, டீசல் விலையை லிட்டருக்கு, ஐந்து ரூபாய் உயர்த்தியது. டீசல் விலை உயர்வு, பணவீக்கத்தில், 8.94 சதவீத தாக்கத்தை ஏற்படுத்தியது. இது, முன், 0.36 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்திருந்தது. எரிபொருள் மற்றும் மின்சாரத்திற்கான பணவீக்கம், சென்ற செப்டம்பரில், 11.88 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், 8.32 சதவீதமாக இருந்தது.
இருப்பினும், கடந்த ஆண்டு செப்டம்பரில், இப்பிரிவிற்கான பணவீக்கம், 14.02 சதவீதம் என்ற அளவில் மிகவும் அதிகரித்திருந்தது. டீசல் தவிர, விமான எரிபொருள், மண்ணெண்ணெய் போன்றவற்றின் விலையும் அதிகரித்திருந்தன. உணவு பொருட்கள் பிரிவு பணவீக்கம், சென்ற செப்டம்பர் மாதம், 7.86 சதவீதமாக குறைந்துள்ளது. இது, முந்தைய ஆகஸ்ட் மாதத்தில், 9.14 சதவீதம் என்ற அளவிலும், முந்தைய ஆண்டின், செப்டம்பரில், 9.62 சதவீதம் என்ற அளவிலும் இருந்தது.மொத்த விலை குறியீட்டு கணக்கீட்டில், உணவு பொருட்கள் பிரிவின் பங்களிப்பு, 14.3 சதவீதம் என்ற அளவில் உள்ளது.சென்ற செப்டம்பரில், உருளை கிழங்கின் விலை, 52.20 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டு செப்டம்பரில், 14.41 சதவீதம் என்ற அளவில் மிகவும் குறைந்திருந்தது.தயாரிப்பு துறை பிரிவில், பருத்தி ஜவுளி வகைகள், காகித பொருட்கள், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களின் விலை அதிகரித்திருந்தது.சென்ற செப்டம்பர் மாதத்தில், தயாரிப்பு துறை பொருட்களின் விலை, 6.26 சதவீதம் என்ற அளவில் உயர்ந்திருந்தது. இது, ஆகஸ்ட் மாதத்தில், 6.14 சதவீதம் என்ற அளவில் சற்று குறைந்திருந்தது என, மத்திய அரசு மேலும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய திட்டக் குழுவின் துணை தலைவர் மாண்டெக் சிங் அலுவாலியா கூறியதாவது:
சென்ற செப்டம்பரில், நாட்டின் பணவீக்கம், 7.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது, ஆகஸ்ட் மாதத்தை விட, சற்று உயர்வு என்றாலும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது, பணவீக்க அளவு குறைந்துள்ளது. இருப்பினும், மத்திய அரசின் எதிர்பார்ப்பான, 5-6 சதவீதத்தை விட, இது அதிகமாகவே உள்ளது. உருளை கிழங்கு சென்ற ஆகஸ்ட் மாதத்தில், நாட்டின் தொழில் துறை உற்பத்தி வளர்ச்சி, 2.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலத்தில், இந்த வளர்ச்சி, 0.4 சதவீதமாக குறைந்துள்ளது.மத்திய அரசு, நாட்டின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, பல்வேறு ஊக்குவிப்புத் திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. இதனால், பொருளாதார வளர்ச்சி, கூடிய விரைவில் மேம்படத் துவங்கும். பணவீக்கமும், கட்டுக்குள் வரும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, பொருளாதார மந்த நிலை நீங்கியுள்ளது என்றே சொல்லலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)