பதிவு செய்த நாள்
17 அக்2012
00:52
சென்னை: மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், புதிய, "ஆல்டோ 800' காரை அறிமுகம் செய்துள்ளது.நாட்டின் கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணியில் உள்ள, மாருதி சுசூகி நிறுவனம், நேற்று நாடு தழுவிய அளவில், "ஆல்டோ 800' காரை அறிமுகம் செய்தது. ஆறு வண்ணங்கள் மற்றும் மூன்று மாடல்களில், இக்கார்கள் வெளிவந்துள்ளன.பெட்ரோல் காரின் விலை, மாடலுக்கு ஏற்ப, 2.48 லட்சம் ரூபாயிலிருந்து, 3.03 லட்சம் ரூபாய் வரை (சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை) உள்ளது. பெட்ரோலில், இயங்கும் புதிய, "ஆல்டோ 800' கார், லிட்டருக்கு, 22.74 கி.மீ., வரையிலும், அழுத்தப்பட்ட எரிவாயுவில் செயல்படும் கார், ஒரு கிலோ எரிவாயுவிற்கு, 30.46 கி.மீ., வரையும் செல்லும்.இப்புதிய காருக்கான முன்பதிவு, சென்ற செப்டம்பரில் துவங்கியது. இதுவரை, புதிய"ஆல்டோ 800' கார் வேண்டி, 10 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.வரும் ஜனவரி முதல் "ஆல்டோ 800' கார்கள் ஏற்றுமதி செய்யப்பட உள்ளன. இந்த புதிய காரை வடிவமைப்பதற்காக, நிறுவனம், 470 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. நவீன வசதிகளுடன், இந்த காரை மாற்றி அமைக்கும் பணியில், 200 பொறியாளர்கள், நான்கு ஆண்டுகள் ஈடுபட்டதாக, இந்நிறுவனத்தின் செயல் ஆ@லாசகர் (பொறியியல்) ஐ.வி.ராவ் தெரிவித்தார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|