விமான நிலைய வளர்ச்சி கட்டணம் ரத்துவிமான நிலைய வளர்ச்சி கட்டணம் ரத்து ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு தங்கம் விலை சவரனுக்கு ரூ.104 உயர்வு ...
மஞ்சள்தூள் முதல் மட்டன் வரை விலை "விர்...'தீபாவளிக்கு மேலும் அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 அக்
2012
13:30

மதுரை:தீபாவளி பண்டிகைக்கு ஒரு மாதம் உள்ள நிலையில், உணவுப்பொருட்களின் விலை 10 சதவீதம் அதிகரித்துள்ளது. தீபாவளியின்போது இன்னும் விலை அதிகரிக்கும்.
தீபாவளிக்காக இனிப்பு, பலகாரங்களுக்கு இப்போதே ஆர்டர் குவிகின்றன. தீபாவளி அன்று உடலுக்கு நல்லெண்ணெய்யும், உணவுக்கு சூரியகாந்தி எண்ணெயும் கட்டாயம். இதன் வரத்து சீராக இருந்தாலும், மின்வெட்டு, மூலப்பொருட்களின் விலை உயர்வை காரணம் காட்டி "செயற்கையாக' விலை உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த தீபாவளி அன்று ரூ.124க்கு விற்ற ஒரு லிட்டர் நல்லெண்ணெய், தற்போது ரூ.160க்கும், தும்பை நல்லெண்ணெய் ரூ.135லிருந்து ரூ.160க்கும் விற்கப்படுகிறது. சூரியகாந்தி எண்ணெய் ரூ.79லிருந்து ரூ.82க்கும் விற்கப்படுகிறது. அடுத்ததாக, பருப்பு வடைக்கும், ஈரல் கூட்டுக்கும், சில இனிப்பு வகைகளுக்கும் பயன்படுவது கடலை பருப்பு. கடந்தாண்டு தீபாவளியின்போது ஒரு கிலோ ரூ.40க்கு விற்கப்பட்டது. இந்தாண்டு வரத்து சீராக இருந்தாலும், தீபாவளிக்காக விலை தொடர்ந்து அதிகரிக்கிறது. கடந்த வாரம் கிலோ ரூ.62க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ.3 அதிகரித்து, ரூ.65க்கு விற்கப்பட்டது.
பருப்பு வியாபாரிகள் சங்கச் செயலாளர் வெற்றிச்செல்வன் கூறுகையில், ""மழையின்மையால் உற்பத்தி பாதித்துள்ளது. கருப்பு கடலைக்கு விலை குறைவாக கிடைக்கும் என்பதால், வெள்ளை நிற கடலையை உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதற்கு ஏற்றுமதி வாய்ப்பு அதிகம் உள்ளது என்பதும் காரணம்'' என்றார்.இனிப்பு மற்றும் இறைச்சி உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் விலையும் கிலோவிற்கு ரூ.10 வரை உயர்ந்துள்ளது.
"தீபாவளி நெருங்கும் சமயத்தில் இன்னும் விலை அதிகரிக்கும்' என வியாபாரிகள் "பயம்' காட்டுகின்றனர். தற்போது, கீழமாசி வீதி பலசரக்கு கடைகளில், ஒரு கிலோ மஞ்சத்தூள், ரூ.120, மல்லி பொட்டி 100, மைதா 40, ரவை 32, ஜீனி 38, பெருங்காயம் 700, துவரம் பருப்பு 75, உருட்டு பருப்பு 65, கல்கண்டு 50, சோம்பு 160, வெந்தயம் 60, மிளகாய் பொடி 130, பூண்டு 80-120, கடலைமாவு 80, புளி 75, மிளகாய் 85, சீரகம் 200-220, சீயக்காய் ரூ.40-60க்கு விற்கப்படுகிறது. ஆட்டுக்கறி விலையை பொறுத்தவரை, பெரும்பாலான கடைகளில், தற்போது கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விற்கப்படுகிறது. இதன் விலையும், தீபாவளியின்போது ரூ.500க்கு மேல் அதிகரித்தாலும் ஆச்சரியமில்லை.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)