பதிவு செய்த நாள்
17 அக்2012
16:00
சென்னையை மையமாக கொண்டு செயல்படும், ராயல் என்ஃபீல்டு நிறுவனம், புல்லட் பைக் விற்பனையில் பிரபலமானது. இந்த நிறுவனம் கடந்த, 2002ம் ஆண்டு தண்டர்பேர்டு பைக் மாடலை அறிமுகப்படுத்தியது. மாதத்துக்கு, 1000 பைக்குகள் என, தண்டர்பேர்டு பைக் விற்பனை இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், சில நாட்களுக்கு முன், தண்டர்பேர்டு 500 என்ற புதிய பைக்கை, ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன், தண்டர்பேர்டு 350 பைக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தண்டர்பேர்டு 500 பைக்கின் விலை, ரூ.1.82 லட்சம்( ஆன்ரோடு, மும்பை) என்றும், தண்டர்பேர்டு 350 பைக்கின் விலை, ரூ. 1.43 லட்சம்( ஆன்ரோடு, மும்பை) என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், தமிழகத்தில், இந்த இரண்டு பைக்குகளின் விலை மாறுபடும்.தண்டர்பேர்டு 500 பைக்கில், கிக் ஸ்டார்ட் மற்றும் எலக்ட்ரிக் ஸ்டார்ட் என, இரண்டு வகைளும் உள்ளன. இந்த பைக்கில், 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. மூன்று வண்ணங்களில், பைக் கிடைக்கும். இந்த பைக்குக்கு, தற்போதே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகப்படுத்தப்பட்ட சில மணி நேரங்களில், 100 பேர் முன்பதிவு செய்துள்ளனர். இதில், 50 பேர் மும்பையை சேர்ந்தவர்கள். ராயல் என்ஃபீல்டு பைக்குகளுக்கு, முன்பதிவு செய்தால், முன்பு, பல மாதங்கள் காத்திருந்த பிறகே, டெலிவரி செய்யப்படும். தற்போது அப்பிரச்னை ஓரளவுக்கு தீர்க்கப்பட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|