பதிவு செய்த நாள்
19 அக்2012
01:10
புதுடில்லி: சர்க்கரை மீதான இறக்குமதி வரியை, 20 சதவீதமாக உயர்த்த, பரிசீலனை செய்து வருவதாக, மத்திய உணவு அமைச்சர் கே.வி.தாமஸ் தெரிவித்தார்.உள்நாட்டு நிறுவனங்களை பாதுகாக்கும் வகையில், சர்க்கரை இறக்குமதி மீதான வரியை, தற்போதைய, 10 சதவீதத்தில் இருந்து, 20 சதவீதமாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இருப்பினும், இது குறித்து, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்படும்.தற்போது, கச்சா சர்க்கரை மீது, 10 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படுகிறது. இறக்குமதி செய்யப்படும் கச்சா சர்க்கரை, பதப்படுத்தப்பட்டு பின்பு, பயன்பாட்டிற்கான சர்க்கரையாக உருவாக்கப்படுகிறது. இதன் வாயிலாக, வேலைவாய்ப்பு கிடைப்பதால், மேற்கண்ட வரியை நீக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.உள்நாட்டில் சர்க்கரை உற்பத்தி, தேவையை விட, அதிகமாக உள்ளது. எனவே, சென்ற மே மாதம் முதல், பொது உரிம அடிப்படையில், சர்க்கரை ஏற்றுமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது, சென்ற செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்துள்ளது. என்றாலும், இது, நடப்பு 2012-13ம் சந்தைப்படுத்தும் பருவம் வரை நீடிக்கப்பட்டுள்ளது.சென்ற செப்டம்பருடன் முடிவடைந்த பருவத்தில், நாட்டின் சர்க்கரை உற்பத்தி, 2.60 கோடி டன்னாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம், உள்நாட்டில், இதற்கான தேவை, 2.20 கோடி டன் என்ற அளவில்தான் உள்ளது என, அமைச்சர் தாமஸ் மேலும் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|