பதிவு செய்த நாள்
20 அக்2012
00:55
புதுடில்லி: சென்ற செப்டம்பர் மாதத்தில், உள்நாட்டில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 40.18 லட்சமாக சரிவடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 45.87 லட்சம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.ஆக, சென்ற செப்டம்பரில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 12 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது என, உள்நாட்டு விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.விமானச் சேவை நிறுவனங்கள், உள்நாட்டு பயணத்திற்கான, விமான கட்டணத்தை மிகவும் உயர்த்தியுள்ளன. இதன் காரணமாகவே, மதிப்பீட்டு மாதத்தில், பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்து போயுள்ளது.இதை எதிர்கொள்ளும் வகையில், குறிப்பாக, ஏர்-இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் போன்ற விமானச் சேவை நிறுவனங்கள், பயணிகள் எண்ணிகையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முன்பதிவு மேற்கொண்டு பயணம் செய்யும் விமான பயணிகளுக்கு, இந்நிறுவனங்கள், 40 சதவீத கட்டணச் சலுகை வழங்குகின்றன.விமான இருக்கைகளுக்கான தேவை, அதாவது, பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து, நான்கு மாதங்களாக சரிவடைந்து வருகிறது. மதிப்பீட்டு மாதத்தில், குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கி வரும், டில்லியைச் சேர்ந்த இண்டிகோ நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 27.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, ஏர்-இந்தியா ( 19.3 சதவீதம்), ஜெட்ஏர்வேஸ் ( 18.1 சதவீதம்), ஜெட்லைட் (5.7 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|