ரயில்வே சரக்கு கட்டண வருவாய் 25 சதவீதம் உயர்வுரயில்வே சரக்கு கட்டண வருவாய் 25 சதவீதம் உயர்வு ... மருந்து கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாகின்றன மருந்து கட்டுப்பாட்டு விதிமுறைகள் கடுமையாகின்றன ...
உள்நாட்டு விமான பயணிகள் எண்ணிக்கை 12 சதவீதம் குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 அக்
2012
00:55

புதுடில்லி: சென்ற செப்டம்பர் மாதத்தில், உள்நாட்டில், விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 40.18 லட்சமாக சரிவடைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டின் இதே மாதத்தில், 45.87 லட்சம் என்ற அளவில் மிகவும் அதிகரித்து காணப்பட்டது.ஆக, சென்ற செப்டம்பரில் விமான பயணம் மேற்கொண்டோர் எண்ணிக்கை, 12 சதவீதம் வீழ்ச்சி கண்டுள்ளது என, உள்நாட்டு விமான போக்குவரத்து தலைமை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.விமானச் சேவை நிறுவனங்கள், உள்நாட்டு பயணத்திற்கான, விமான கட்டணத்தை மிகவும் உயர்த்தியுள்ளன. இதன் காரணமாகவே, மதிப்பீட்டு மாதத்தில், பயணிகளின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவு குறைந்து போயுள்ளது.இதை எதிர்கொள்ளும் வகையில், குறிப்பாக, ஏர்-இந்தியா மற்றும் ஜெட் ஏர்வேஸ் போன்ற விமானச் சேவை நிறுவனங்கள், பயணிகள் எண்ணிகையை அதிகரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, முன்பதிவு மேற்கொண்டு பயணம் செய்யும் விமான பயணிகளுக்கு, இந்நிறுவனங்கள், 40 சதவீத கட்டணச் சலுகை வழங்குகின்றன.விமான இருக்கைகளுக்கான தேவை, அதாவது, பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து, நான்கு மாதங்களாக சரிவடைந்து வருகிறது. மதிப்பீட்டு மாதத்தில், குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கி வரும், டில்லியைச் சேர்ந்த இண்டிகோ நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு, 27.2 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இதையடுத்து, ஏர்-இந்தியா ( 19.3 சதவீதம்), ஜெட்ஏர்வேஸ் ( 18.1 சதவீதம்), ஜெட்லைட் (5.7 சதவீதம்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)