பதிவு செய்த நாள்
26 அக்2012
00:45
புதுடில்லி: வரும் டிசம்பர் மாதத்திற்குள், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 13 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடியும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களுடன் கொண்டுள்ள, மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இதில், வரும் டிசம்பருக்குள், 13 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடியும் என, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலர், அரவிந்த் மயாராம் தெரிவித்தார்.பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படும் நிலையில், மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை, 5.3 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2016-17ம் நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறையை, 3 சதவீதம் என்ற அளவில் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஆயில் இந்தியா, எம்.எம்.டி.சி., இந்துஸ்தான் காப்பர் மற்றும் நால்கோ ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அரசுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, அரவிந்த் மயாராம் மேலும் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|