தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 குறைவு ... பொருளாதார மந்த நிலையால் கட்டமைப்பு துறையில் சுணக்கம் பொருளாதார மந்த நிலையால் கட்டமைப்பு துறையில் சுணக்கம் ...
"பொது துறை பங்கு விற்பனை மூலம் ரூ.13 ஆயிரம் கோடி திரட்ட முடியும்'
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 அக்
2012
00:45

புதுடில்லி: வரும் டிசம்பர் மாதத்திற்குள், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், 13 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடியும் என, மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.மத்திய அரசு, நடப்பு 2012-13ம் நிதியாண்டில், பொதுத் துறை நிறுவனங்களுடன் கொண்டுள்ள, மொத்த பங்கு மூலதனத்தில், குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வதன் மூலம், 30 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட இலக்கு நிர்ணயித்துள்ளது.இதில், வரும் டிசம்பருக்குள், 13 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட முடியும் என, மத்திய பொருளாதார விவகாரங்கள் துறையின் செயலர், அரவிந்த் மயாராம் தெரிவித்தார்.பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை மூலம், நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எட்டப்படும் நிலையில், மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை, 5.3 சதவீதமாக இருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் 2016-17ம் நிதியாண்டில், நாட்டின் நிதி பற்றாக்குறையை, 3 சதவீதம் என்ற அளவில் குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.ஆயில் இந்தியா, எம்.எம்.டி.சி., இந்துஸ்தான் காப்பர் மற்றும் நால்கோ ஆகிய நான்கு நிறுவனங்களின் பங்கு வெளியீட்டிற்கு, மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்நிறுவனங்களின் பங்கு வெளியீடுகள் மேற்கொள்ளப்படும் நிலையில், அரசுக்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என, அரவிந்த் மயாராம் மேலும் தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)