பதிவு செய்த நாள்
26 அக்2012
00:47
மும்பை: நாட்டின், அடிப்படை கட்டமைப்பு துறையில், மந்த நிலை நிலவுவதால், பல முன்னணி நிறுவனங்கள், அவற்றின் விரிவாக்கத் திட்டங்களை ஒத்தி வைத்துள்ளதாக, ஆய்வு நிறுவனமான, "இக்ரா' தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார மந்த நிலை, அரசின் கொள்கை திட்டங்களில் தெளிவில்லாத நிலை போன்றவற்றால், புதிய ஒப்பந்தங்கள் எதுவும் மேற்கொள்ளப்பட வில்லை.நடப்பு 2012-13ம் நிதியாண்டில், மத்திய அரசு, சாலை போக்குவரத்து, துறைமுகம், மின்சாரம், விமான நிலையங்கள், ரயில்வே போன்ற துறைகளில், கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளும் வகையில், பல்வேறு திட்டங்களை அறிவித்தது.ஆனால், இவற்றை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வருவதால், இத்துறையில் ஈடுபட்டு வரும், பல தனியார் துறை நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, "இக்ரா' தெரிவித்துள்ளது. ஏற்கனவே நிலுவையில் உள்ள பல திட்டங்களையும் செயல்படுத்த முடியாமல் உள்ளன.ஏனெனில், நிலம் கையகப்படுத்துதல், வன துறையின் அனுமதி கிடைக்காதது, மூலப் பொருட்களின் விலை உயர்வு, பணியாளர்களுக்கான சம்பள உயர்வு போன்றவற்றால், இத்துறையில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின், லாப வரம்பு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என, "இக்ரா' மேலும் கூறியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|