பதிவு செய்த நாள்
26 அக்2012
00:48
சேலம்: தமிழகத்தில் நிலவும் கடுமையான மின் வெட்டு காரணமாக, "டைரி' தயாரிப்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கடந்த ஆண்டை விட, "டைரி' விலை, 20 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
சிவகாசிபுத்தாண்டுக்கான, "டைரி' தயாரிப்பை பொறுத்த வரை, சிவகாசியை அடுத்து மும்பை, கோல்கட்டா, டில்லி ஆகிய நகரங்கள் முன்னணியில் உள்ளன.சிவகாசியில் லவ்லி, கார்னேசன், மெஜஸ்டிக், வசந்தம் ஆகிய நிறுவனங்களும், டில்லியில், நாவல்டி, கிளாசிக் ஆகியவையும், "டைரி' தயாரிப்பில் சிறந்து விளங்குகின்றன.
கோல்கட்டாவில் கிளாசிக், ஹார்டுவேர்ஸ், நேஷனல் ஆகிய நிறுவனங்களும், மும்பையில் நாவல்டி நிறுவனத்தின், "டைரி' களுக்கும் சந்தையில் நல்ல வரவேற்பு உள்ளன.டில்லி, கோல்கட்டா, மும்பையை விட, சிவகாசியில் தயார் செய்யப்படும் "டைரி' கள் தான், சந்தை விலை நிர்ணயத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
சிவகாசியை விட, வடமாநில "டைரி' களின் விலை, அதிகமாக இருப்பதும் இதற்கு காரணமாகும்.நடப்பாண்டில் மூலப்பொருட்கள் விலை உயர்வு, ஊதிய செலவினம் அதிகரிப்பு, மின் தடையால் டீசல் பயன்பாடு உயர்ந்துள்ளது போன்றவற்றால், சிவகாசி "டைரி' களின் உற்பத்தி செலவு அதிகரித்து, அவற்றின் விலை உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு, எக்ஸ்க்யூட்டிவ் "டைரி' கள், 110 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டன. நடப்பாண்டில் இவை, 143 ரூபாய் முதல், 240 ரூபாய் வரை விற்கப்படுகின்றன.
கடந்த ஆண்டு, 40 - 120 ரூபாய் வரை, விற்பனையான பாப்புலர் சைஸ் "டைரி' கள், விலை, 75 - 175 ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் அனைத்து வகையான டைரிகளின் விலை, 20 சதவீதம் உயர்ந்துள்ளது.டைரிகளை தயாரித்து வழங்கும் நிறுவனங்கள், செப்டம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில், முதல் தவணை சப்ளையை முடித்து விடும்.வியாபாரிகள் வழங்கும் ஆர்டர்களுக்கு ஏற்ப, அக்டோபர் முதல் வாரத்தில், இரண்டாவது கட்டமாக, "டைரி' கள், சப்ளை செய்யப்படும்.விற்பனையாளர்கள்இந்த வகையில், இரண்டாவது தவணை ஆர்டரை விற்பனையாளர்கள் வழங்கி உள்ளனர். ஆனால், மின்தடையை காரணம் காட்டி அவற்றை ஏற்றுக் கொள்ள சிவகாசி நிறுவனங்கள், தயங்கி வருகின்றன.இதனால், "டைரி'கள், தட்டுப்பாடின்றி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.சேலம் டைரி விற்பனையாளர் மாரிச்சாமி கூறியதாவது:
புத்தாண்டு, 2013க்கான இரண்டாம் கட்ட "டைரி' களுக்கு, நாங்கள் ஆர்டர் கொடுத்த நிலையில், தயாரிப்பு நிறுவனங்கள் அவற்றை சப்ளை செய்யாமல் தாமதம் செய்து வருகின்றன. இந்த தாமதத்துக்கு, மின்தடையை காரணம் காட்டுகின்றனர்.தமிழகத்தில் தான் மின்வெட்டு அதிகமாக உள்ளது. ஆனால், வடமாநில நிறுவனங்கள் அதிக லாப நோக்கோடு, "டைரி' சப்ளையில் தாமதம் செய்து வருகின்றன. இந்நிலை தொடரும் பட்சத்தில் டிசம்பர் முதல் வாரத்தில், "டைரி' களுக்கு, தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றார்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|