பதிவு செய்த நாள்
27 அக்2012
00:49
புதுடில்லி: வரும் 2015ம் ஆண்டில், இந்தியா - சீனா இடையிலான பரஸ்பர வர்த்தகம், 10 ஆயிரம் கோடி டாலராக (5.50 லட்சம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணைச் செயலர் அசித் திரிபாதி தெரிவித்தார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:இரு நாடுகளுக்கு இடையில், மோட்டார் வாகனம், குழந்தைகள் விளையாட்டுச் சாமான்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் மீது, வர்த்தகம் நடைபெற்று வருகிறது.சென்ற 2011-12ம் நிதியாண்டில், இரு நாடுகளுக்கும் இடையிலான, பரஸ்பர வர்த்தகம், 7,545 கோடிடாலராக இருந்தது. இதில், இந்தியாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ஏற்றுமதி, 1,790 கோடி டாலராகவும், சீனாவிலிருந்து மேற்கொள்ளப்பட்ட இறக்குமதி, 5,755 கோடி டாலராகவும் இருந்தன.இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர வர்த்தகம் சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, வரும் 2015ம் ஆண்டில், இந்தியா - சீனா இடையிலான பரஸ்பர வர்த்தகம், 5.50 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். இவ்வாறு அசித் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|