பதிவு செய்த நாள்
29 அக்2012
02:54
நாமக்கல் : தமிழகம், கேரளாவில், முட்டை விலை, 315 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில், முட்டை விலை, 45 காசு உயர்ந்து உள்ளது. கோழிப் பண்ணையாளர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. முட்டை உற்பத்தி மற்றும் சந்தை நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர்.இதையடுத்து, 310 காசுக்கு விற்பனைசெய்யப்பட்ட முட்டை விலையை, ஐந்து காசுகள் உயர்த்தி, 315 காசுக்கு விற்க முடிவு செய்யப்பட்டது.ஆக, கடந்த, 22ம் தேதி, 270 காசாக இருந்த முட்டை விலை, 30 காசு ஏற்றம் கண்டு, 300 காசு என, நிர்ணயம் செய்யப்பட்டது. அதன்பின், 25ம் தேதி, பத்து காசு உயர்த்தி, 310 காசாகவும், 26ம் தேதி ஐந்து காசு உயர்த்தி, 315 காசாகவும் நிர்ணயிக்கப்பட்டது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் முட்டை விலை, 45 காசு ஏற்றம் கண்டிருப்பது, கோழிப்பண்ணையாளர்கள் மத்தியில், பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம்: சென்னை, 315 காசு, பெங்களூரு, 310 காசு, மைசூரு, 310 காசு, ஹைதராபாத், 290 காசு, மும்பை, 320 காசு, விஜய வாடா, 286 காசு, கோல்கட்டா, 325 காசு, பார்வாலா, 305 காசு, டில்லி, 331 காசு.இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.நாமக்கல்லில், நடந்த பண்ணையாளர், வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், முட்டைக் கோழி விலை கிலோ, 54 ரூபாயாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில், அதன் விலை கிலோ, 57 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|