02. ஒரே பிரிமிய குழு காப்பீட்டு திட்டங்களுக்கு அதிக வரவேற்பு02. ஒரே பிரிமிய குழு காப்பீட்டு திட்டங்களுக்கு அதிக வரவேற்பு ... முட்டை விலை 315 காசாக நிர்ணயம் முட்டை விலை 315 காசாக நிர்ணயம் ...
பரஸ்பர நிதியங்கள் 16 லட்சம் கணக்குகளை இழந்தன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2012
02:53

மும்பை : பரஸ்பர நிதி நிறுவனங்கள், சென்ற செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 16 லட்சம் கணக்குகளை இழந்துள்ளன. பங்குச் சந்தையின் ஏற்ற, தாழ்வு தான் இதற்கு காரணம் என, இந்திய பரஸ்பர நிதியங்கள் கூட்டமைப்பு (ஆம்பி)தெரிவித்துள்ளது.நடப்பாண்டில், சென்ற மார்ச் இறுதி நிலவரப்படி, உள்நாட்டில் உள்ள, பரஸ்பர நிதியங்களிடம் 4.64 கோடி கணக்குகள் இருந்தன. இந்த எண்ணிக்கை, நடப்பு 2012 - 13ம் நிதியாண்டின், ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், 3.5 சதவீதம் வீழ்ச்சி கண்டு, 4.48 கோடியாக குறைந்துள்ளது.சில்லரை முதலீட்டாளர்கள்குறிப்பாக, மதிப்பீட்டு காலத்தில்,சில்லரை முதலீட்டாளர் பிரிவில் அதிக அளவிற்கு கணக்குகள் முடிக்கப்பட்டு உள்ளன. இவற்றில், பெரும்பாலானவை பங்கு சார்ந்த முதலீட்டு திட்டங்களாகும்.இவ்வகை முதலீட்டு திட்டங்களில் இருந்து, 6,341 கோடி ரூபாயை முதலீட்டாளர்கள் திரும்ப பெற்றுள்ளனர். அதே சமயம், இதே காலத்தில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண், "சென்செக்ஸ்' 7 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட முதலீட்டாளர்கள், லாபநோக்கம் கருதி, தங்கள் கணக்கை முடித்து, முதலீட்டை திரும்ப பெற்றுள்ளனர்.குறிப்பாக, பங்குச் சந்தை ஏற்றம் கண்ட செப்டம்பர் மாதத்தில், அதிக அளவிலான முதலீட்டு கணக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.அதே சமயம், பங்குச் சந்தை மேலும் ஏற்றம் காணும் என்ற எதிர்பார்ப்பில், 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட சில்லரை முதலீட்டாளர்கள், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்ட கணக்கை முடிக்காமல், தொடர்ந்து பராமரித்து வருகின்றனர்.பரஸ்பர நிதியங்களின், பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், சில்லரை முதலீட்டாளர்கள், 1.40 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்து உள்ளனர்.இதில், 85 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான முதலீடுகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இதற்கு நேர்மாறாக, 5 லட்ச ரூபாய்க்கு மேலாக முதலீடு செய்த, அதிக சொத்து மதிப்புள்ள தனி நபர் கணக்குகளில், 60 சதவீதத்திற்கும் மேலாக முடிக்கப்பட்டு உள்ளன.பங்கு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு குறைந்து வரும் நிலையில், கடன் பத்திரங்கள் சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களில், அவர்களின் முதலீடு அதிகரித்து வருகிறது.மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொண்ட ஆறு மாத காலத்தில், "கில்ட்' "லிக்யுட்' உள்ளிட்ட கடன் பத்திரங்களில், சில்லரை முதலீட்டாளர்களின் கணக்கு, 10.5 சதவீதம் உயர்ந்துள்ளது.கடந்த ஆண்டு, பங்குச் சந்தையின்ஏற்றத் தாழ்வை கண்ட சில்லரை முதலீட்டாளர்கள், கடன்பத்திரங்கள் தான் பாதுகாப்பானவை என, முடிவு செய்து அவற்றில் முதலீடு செய்து வருகின்றனர். இதனால், இப்பிரிவிலான சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என, பரஸ்பர நிதி ஆலோசகர் ஒருவர் தெரிவித்தார்.பரஸ்பர நிதியங்கள் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், கார்ப்பரேட் நிறுவனங்கள் தொடர்ந்து முதலிடத்தை வகித்து வருகின்றன. எனினும், மதிப்பீட்டு காலத்தில், இவற்றின் பங்களிப்பு, 46 சதவீதத்தில் இருந்து, 43 சதவீதமாக குறைந்துள்ளது.பரஸ்பர நிதியங்கள், கடன் பத்திரமுதலீடு சார்ந்த பரஸ்பர நிதி திட்டங்களின் கீழ் நிர்வகிக்கும் சொத்து மதிப்பில், கார்ப்பரேட் நிறுவனங்களின் பங்களிப்பு 60 சதவீதமாக உள்ளது. அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர் மற்றும்சில்லரை முதலீட்டாளர்களின் பங்களிப்பு, முறையே 25 மற்றும் 23 சதவீதமாக உள்ளது.சென்ற மார்ச் இறுதி நிலவரப்படி, இந்த இரு பிரிவுகளின் பங்களிப்பு தலா, 27 சதவீதமாக இருந்தது.சென்ற ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாத காலத்தில், பரஸ்பர நிதியங்கள் நிர்வகித்து வந்த பரஸ்பர நிதி திட்டங்களின் சொத்து மதிப்பு, 7.22 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)