பதிவு செய்த நாள்
29 அக்2012
02:50
புதுடில்லி:
ஆயுள் காப்பீட்டு துறையில், ஒரு முறை பிரிமியம் செலுத்தக்கூடிய குழு
காப்பீட்டு திட்டங்களுக்கு மவுசு அதிகரித்து வருகிறது. இத்திட்டங்கள், இதர
ஆயுள் காப்பீட்டு திட்டங்களை விட, சிறப்பான அளவில் வளர்ச்சி
கண்டுள்ளன.நடப்பாண்டின், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், ஆயுள்
காப்பீட்டு நிறுவனங்களின் புதிய பிரிமியம் வருவாயில், ஒரு முறை பிரிமியம்
செலுத்தும் குழு காப்பீட்டு திட்டங்கள், 36 சதவீதம் வளர்ச்சி
கண்டுள்ளன.இது, இதர திட்டங்களை விட, மிக உயர்வான வளர்ச்சி விகிதமாகும்.
இதன் மூலம், மதிப்பீட்டிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட காலாண்டில், ஒரு முறை
பிரிமியம் செலுத்தும் வசதி கொண்ட குழு காப்பீட்டு திட்டங்கள் மூலம்,
காப்பீட்டு நிறுவனங்கள், 21,488 கோடி ரூபாயை திரட்டியுள்ளன.ஆயுள்
காப்பீட்டு துறையின் பிரிமியம் வருவாயில், ஒரு முறை பிரிமியம் செலுத்தும்
குழு காப்பீட்டுதிட்டத்தின் பங்களிப்பு, 20 சதவீதமாக உள்ளது.சென்ற
2011-12ம் நிதியாண்டில், எல்.ஐ.சி.,
நிறுவனம், ஒரு முறை பிரிமியம் செலுத்தும் வசதி கொண்ட குழு காப்பீட்டு
திட்டங்கள் வாயிலாக, 28,200 கோடி ரூபாயை திரட்டியுள்ளது. அதே சமயம், இதே
காலத்தில், தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் 5,023 கோடி ரூபாயை
வசூலித்துள்ளன.இவை, முந்தைய நிதியாண்டில், முறையே 22,889 கோடி ரூபாய்
மற்றும் 3,467 கோடி ரூபாயாக இருந்தன.குழு காப்பீட்டு திட்டங்களுக்கான
பிரிமியம் குறைவாக உள்ளதால் வரவேற்பு அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|