பதிவு செய்த நாள்
29 அக்2012
02:49
புதுடில்லி: இந்தியாவை சேர்ந்த முன்னணி நிறுவனங்கள், அமெரிக்காவில் மேற்கொண்ட முதலீடுகளால்,
50 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளதாக, அமெரிக்க அரசின் துணை செயலர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:வரும், 2025ம் ஆண்டில், உலக பொருளாதாரத்தில் மூன்றாவது மிகப் பெரிய நாடாக இந்தியாதிகழும். இந்திய அரசு, அடுத்த ஐந்து ஆண்டுகளில், அடிப்படை கட்டமைப்பு துறைகளில், ஒரு லட்சம் கோடி டாலரை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது.
இந்திய நிறுவனங்கள், அமெரிக்காவில், பல்வேறு தொழில்களில் குறிப்பாக, தகவல் தொழில்நுட்ப துறையில் அதிக அளவில் முதலீடு செய்துவருகின்றன.@மலும், அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் அதிகளவில் தொழில் தொடங்க உள்ளன. இதன்விளைவாக, இரு நாடுகளும் சிறப்பான அளவில் வளர்ச்சி காணும். இவ்வாறு வில்லியம் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|