அதிகளவில் முதலீட்டை கவர்ந்ததில் ஆரோக்ய பராமரிப்பு துறை முன்னிலைஅதிகளவில் முதலீட்டை கவர்ந்ததில் ஆரோக்ய பராமரிப்பு துறை முன்னிலை ... இந்திய நிறுவனங்கள்: அமெரிக்காவில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இந்திய நிறுவனங்கள்: அமெரிக்காவில் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு ...
ரபி பருவத்தில் உரத்திற்கான தேவை அதிகரிக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2012
00:45

புதுடில்லி: நடப்பு ரபி பருவத்தில் (அக்., - மார்ச்), உர வகைகளுக்கான தேவை அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. நாட்டின் பல பாகங்களில், காலம் தவறிய மழைப் பொழிவால், கரீப் பருவத்தில், உரத்திற்கான தேவை குறைந்தது. மேலும், யூரியா தவிர்த்த, இதர உர வகைகளின் விலை, கடந்த ஆண்டை விட உயர்ந்து உள்ளதால், பல விவசாயிகள், டீ.ஏ.பி., மற்றும் என்.பி.கே., ஆகிய உர வகைகளின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வடகிழக்கு பருவமழையை சார்ந்துள்ள பல மாநிலங்களில், மழை நன்கு பெய்யத் துவங்கியுள்ளது.இதனால், உர பயன்பாடு அதிகரிக்கும் என, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.மேலும், கரீப் பருவத்தை (ஜூலை.,-செப்.,) விட, ரபி பருவத்தில், உரத்திற்கான தேவை நல்ல அளவில் வளர்ச்சி காணும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ரபி பருவ சாகுபடியை முன்னிட்டு, பல பகுதிகளுக்கு, உரங்கள் அனுப்பப்பட்டு விட்டதாக, உரத் தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.செப்டம்பருடன் முடிவடைந்த கரீப் பருவத்தில், யூரியா விற்பனை, கடந்த ஆண்டின் இதே காலத்தை விட, 2.76 சதவீதம் சரிவடைந்துள்ளது.இதேபோன்று, டீ.ஏ.பி., உர பயன்பாடு 18 சதவீதம் என்ற அளவிலும், என்.பி.கே., உர விற்பனை, தேவை குறைந்ததால், மிகவும் அதிகபட்சமாக, அதாவது, 30 சதவீத அளவிற்கும் சரிவடைந்துள்ளது. ரபி பருவத்திற்கான, உரத் தேவை கடந்த ஆண்டைப் போன்றே இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ரபி பருவத்தில், யூரியா உர விற்பனை 153.89 லட்சம் டன்னாக இருந்தது.டீ.ஏ.பி., மற்றும் என்.பி.கே., உர வகைகள் விற்பனை, முறையே, 63 லட்சம் டன் மற்றும் 57.36 லட்சம் டன் என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ரபி பருவத்தில், உரத் தேவை அதிகரிக்கும் என்ற மதிப்பீட்டையடுத்து, டீ.ஏ,பி., மற்றும் என்.பி.கே., உர வகைகளின் கையிருப்பு குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது.கையிருப்பு அதிகம் இருப்பதால், மேற்கண்ட உர வகைகளை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் இறக்குமதியை, உர நிறுவனங்கள் தற்காலிகமாக நிறுத்தியுள்ளன.அதேசமயம், மேற்கண்ட உர வகைகள் விற்பனை, அதிகரிக்கும் நிலையில், டிசம்பர் மாதம் முதற்கொண்டு, உரத் தயாரிப்பு நிறுவனங்கள் மூலபொருட்கள் இறக்குமதிக்கு, புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ளும் என, தெரியவந்துள்ளது.இந்நிலையில், டீ.ஏ.பி., மற்றும் என்.பி.கே., உர வகைகளின் விலை மிகவும் உயர்ந்துள்ளதால், பல விவசாயிகள், இவற்றின் பயன்பாட்டை குறைத்துக் கொண்டுள்ளனர். அதேசமயம், மேற்கண்ட உரங்களுக்கு பதிலாக, விவசாயிகள், யூரியா உரத்தை அதிகம் பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.தற்போது, சர்வதேச சந்தையில், கலப்பு உர வகைகளின் விலை, சரிவடைந்துள்ளது. ஆனால், கடந்த இரண்டு, மூன்று மாதங்கள் வரை டாலருக்கு எதிரான ரூபாயின் வெளி மதிப்பு சரிந்திருந்தபோது, உர தயாரிப்பிற்கான மூலப் பொருட்களை, இத்துறை நிறுவனங்கள், அதிக விலை கொடுத்து வாங்க வேண்டி இருந்தது.
இச்சூழ்நிலையில், டீ.ஏ.பி மற்றும் என்.பி.கே., உரங்களின் விலையை குறைக்க முடியாத நிலை உள்ளதாக, இத்துறையைச் சேர்ந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்தார்.தற்போதைய நிலையில், யூரியா உரத்தின் விலை நிர்ணயம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு டன் யூரியா, 5,360 ரூபாயாக உள்ளது. அதேசமயம், ஒரு டன் டீ.ஏ.பி., உரத்தின் விலை, 24 ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது. இது, கடந்த ஆண்டு, 18 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் இருந்தது. ஒரு டன் என்.பி.கே., உரத்தின் விலை, 22 ஆயிரம் ரூபாய் என்ற அளவில் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)