பதிவு செய்த நாள்
28 அக்2012
00:43
புதுடில்லி:
நடப்பு 2012ம் ஆண்டில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது
காலாண்டில், சர்வதேச துணிகர முதலீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம்
மற்றும் ஆரோக்யபராமரிப்பு துறைகளில், 1,067 கோடி ரூபாயை முதலீடு
செய்துள்ளன.கடந்த 2011ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முதல், ஆரோக்ய
பராமரிப்பு மற்றும் ஐ.டி., துறைகள், சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகின்றன.
இது, வரும் ஐந்து காலாண்டுகளுக்கும் தொடரும் என, மெர்காம் நிறுவனம்
தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், ஆரோக்ய தகவல் மேலாண்மை
நிறுவனங்கள், 20 ஒப்பந்தங்கள் வாயிலாக, 556 கோடி ரூபாயை ஈர்த்து,
முன்னிலையில் உள்ளது.இதையடுத்து, மொபைல் ஹெல்த் நிறுவனங்கள் ஏழு
ஒப்பந்தங்கள் வாயிலாக 215 கோடிரூபாயும் , சமூக ஆரோக்ய தொடர்பு நிறுவனங்கள்,
நான்கு ஒப்பந்தங்கள் வாயிலாக, 143 கோடி ரூபாயும் ஈர்த்துள்ளன என, மெர்காம்
கேப்பிட்டல் குழுமத்தின் நிர்வாக பங்குதாரர் ராஜ் பிரபு
தெரிவித்துள்ளார்.துணிகர முதலீட்டை அதிகளவு கவர்ந்ததில்,டெல்கேர் நிறுவனம்
(140 கோடி ரூபாய்) முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, கனெக்சர் (110 கோடி
ரூபாய்), டாக்ஸிமிட்டி (94 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இணைத்தல்
மற்றும் கையகப்படுத்துதலிலும், மேற்கண்ட துறைகளைச் சேர்ந்த
நிறுவனங்களேமுக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக,
மதிப்பீட்டு காலாண்டில், மேற்கண்ட துறைகளில், 17,600 கோடி ரூபாய்
மதிப்பிலான, 37 இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|