ரொக்க இருப்பு விகிதம் குறைய வாய்ப்பு ரொக்க இருப்பு விகிதம் குறைய வாய்ப்பு ... ரபி பருவத்தில் உரத்திற்கான தேவை அதிகரிக்கும் ரபி பருவத்தில் உரத்திற்கான தேவை அதிகரிக்கும் ...
அதிகளவில் முதலீட்டை கவர்ந்ததில் ஆரோக்ய பராமரிப்பு துறை முன்னிலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 அக்
2012
00:43

புதுடில்லி: நடப்பு 2012ம் ஆண்டில், ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான மூன்றாவது காலாண்டில், சர்வதேச துணிகர முதலீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆரோக்யபராமரிப்பு துறைகளில், 1,067 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளன.கடந்த 2011ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முதல், ஆரோக்ய பராமரிப்பு மற்றும் ஐ.டி., துறைகள், சிறப்பாக வளர்ச்சி கண்டு வருகின்றன. இது, வரும் ஐந்து காலாண்டுகளுக்கும் தொடரும் என, மெர்காம் நிறுவனம் தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலாண்டில், ஆரோக்ய தகவல் மேலாண்மை நிறுவனங்கள், 20 ஒப்பந்தங்கள் வாயிலாக, 556 கோடி ரூபாயை ஈர்த்து, முன்னிலையில் உள்ளது.இதையடுத்து, மொபைல் ஹெல்த் நிறுவனங்கள் ஏழு ஒப்பந்தங்கள் வாயிலாக 215 கோடிரூபாயும் , சமூக ஆரோக்ய தொடர்பு நிறுவனங்கள், நான்கு ஒப்பந்தங்கள் வாயிலாக, 143 கோடி ரூபாயும் ஈர்த்துள்ளன என, மெர்காம் கேப்பிட்டல் குழுமத்தின் நிர்வாக பங்குதாரர் ராஜ் பிரபு தெரிவித்துள்ளார்.துணிகர முதலீட்டை அதிகளவு கவர்ந்ததில்,டெல்கேர் நிறுவனம் (140 கோடி ரூபாய்) முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, கனெக்சர் (110 கோடி ரூபாய்), டாக்ஸிமிட்டி (94 கோடி ரூபாய்) ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இணைத்தல் மற்றும் கையகப்படுத்துதலிலும், மேற்கண்ட துறைகளைச் சேர்ந்த நிறுவனங்களேமுக்கிய பங்கு வகிக்கின்றன. இதற்கு எடுத்துக்காட்டாக, மதிப்பீட்டு காலாண்டில், மேற்கண்ட துறைகளில், 17,600 கோடி ரூபாய் மதிப்பிலான, 37 இணைத்தல் மற்றும் கையகப்படுத்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)