பதிவு செய்த நாள்
30 அக்2012
01:27
புதுடில்லி: உலகளவில், இணையதளத்தை பயன்படுத்துவதில், இந்தியா மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அண்மை கால புள்ளி விவரத்தின்படி,இந்தியாவில் இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 12.50 கோடியாக அதிகரித்துள்ளது.இந்தியாவில், இச்சந்தை ஆண்டுக்கு, 41 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருவதாக, "அசோசெம்' மற்றும் "காம்ஸ்கோர்' ஆகிய அமைப்புகள் மேற்கொண்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் வரையிலுமாக, சீனாவில், இணையதளம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, 1.40 கோடி அதிகரித்து, 33.60 கோடியாக உயர்ந்து உள்ளது. அதேசமயம், இந்தியாவில், இந்த பயன்பாட்டு வளர்ச்சி, கூடுதலாக, 1.80 கோடியாக இருந்தது என, "அசோசெம்' தெரிவித்துள்ளது.இந்தியாவில், இணையதள பயன்பாட்டில், 15 - 34 வயதினரின் பங்களிப்பு, 75 சதவீதம் என்ற அளவில் உள்ளது.ஆக, சர்வதேச அளவில், குறைந்த வயதினர், இணையதளத்தை பயன்படுத்துவோர் இந்தியாவில் தான் அதிகமாக உள்ளனர் என, "அசோசெம்'ன், தலைமை செயலர் டீ.எஸ்.ராவத் தெரிவித்தார்.
இந்தியாவில், சமூக வலைதளம், தேடுதல், பொழுது போக்கு மற்றும் ஊடக இணையதளங்களை பார்ப்பது, மிகவும் அதிகமாக உள்ளது. நாட்டில், இணையதளம் பயன்படுத்துவோரின் மொத்த எண்ணிக்கையில், 40 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இணையதளத்தை பயன்படுத்தும் பெரும்பாலானோர் வாடகை கார், சுற்றுலா முகவர்களைஅணுகுதல், விமானம் மற்றும் ஓட்டல்கள் தொடர்பான தகவல்களை பெறுகின்றனர்.இணையதளம் பயன்படுத்துவோரில், ஐந்தில் ஒருவர் ரயில்வே இணையத்தை பார்வையிடுகின்றனர் என, ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|