பதிவு செய்த நாள்
30 அக்2012
01:28
புதுடில்லி:
நாட்டின், பல பாகங்களில், நடப்பு ரபி பருவத்தில், எண்ணெய் வித்துக்கள்
சாகுபடி, மிகவும் சுணக்கமாக உள்ளது என, இந்திய எண்ணெய் உற்பத்தியாளர்
கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தென் மேற்கு பருவ மழை பொழிவில் ஏற்பட்ட தாமதத்தால், சென்ற செப்டம்பர் மாதத்துடன்
முடிவுற்ற கரீப் பருவத்தின், அறுவடை பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இதன்
காரணமாக, ரபி பருவ, எண்ணெய் வித்துக்கள் சாகுபடி பரப்பளவு குறைந்து உள்ளதாக
தெரிய வந்துள்ளது.நடப்பு அக்டோபர் 25ம் தேதி வரையிலுமாக, 8.37 லட்சம் ஹெக்டேரில் மட்டுமே,
எண்ணெய் வித்துக்கள் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம், கடந்த ரபி
பருவத்தின் இதே காலத்தில், 20.15 லட்சம் ஹெக்டேரில், எண்ணெய் வித்துக்கள்
சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின், வட மாநிலங்களில், ரபி பருவத்தில், கடுகு மற்றும் சூரிய காந்தி போன்ற எண்ணெய்வித்துக்கள், அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. கணக்கீட்டு காலத்தில்,
கடுகு எண்ணெய் வித்துக்கள் சாகுபடி, 6.71 லட்சம் ஹெக்டேரில்
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டின், இதே காலத்தில், 18.55 லட்சம்
ஹெக்டேராக இருந்தது. இதுகுறித்து சமையல் எண்ணெய் உற்பத்தியாளர், சங்கத்தின்
உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "கரீப் பருவ சாகுபடி பின்னடைவால், ரபி பருவ
எண்ணெய் வித்துக்கள் சாகுபடியும் பின் தங்கியுள்ளது. மேலும், விவசாயிகள்,
சாதகமான பருவ நிலைக்காக காத்துள்ளனர். அடுத்த ஓரிரு வாரங்களில், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியில் விறுவிறுப்பு ஏற்படும்' என்றார்.நாட்டின்,
பல பாகங்களில், நெல் உள்ளிட்ட இதர தானியங்கள் அறுவடையில், காலதாமதம்
ஏற்பட்டு உள்ளது. இதுவும், எண்ணெய் வித்துக்கள் சாகுபடியில், பின்னடைவை
ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், மத்திய அரசு, எண்ணெய் வித்துக்களுக்கான
குறைந்தபட்ச ஆதரவு விலையை,இன்னும் அறிவிக்கவில்லை. இதுகுறித்த அறிவிப்பு
வெளியான பிறகே, இவற்றின் சாகுபடி குறித்து முடிவு எடுக்கப்படும் என, விவசாய
அமைப்பை சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|