பதிவு செய்த நாள்
30 அக்2012
01:32
புதுடில்லி:
நடப்பு 2012ம் ஆண்டில், இதுவரையிலுமாக மேற்கொள்ளப்பட்ட அரிசி
ஏற்றுமதியில், தாய்லாந்தை பின்னுக்கு தள்ளி, இந்தியா முதலிடத்தில் உள்ளதாக,
அமெரிக்க வேளாண் துறை தெரிவித்து உள்ளது.சென்ற 2011ம் ஆண்டில், தாய்லாந்து
நாட்டின் அரிசி ஏற்றுமதி, 1.06 கோடி டன்னாக இருந்தது. அதேசமயம்,
நடப்பாண்டில் இதுவரையிலுமாக, இந்நாட்டின் அரிசி ஏற்றுமதி, 65 லட்சம் டன்
என்ற அளவிலேயே உள்ளது.சென்ற 2011-12ம் வேளாண் பருவத்தில் (ஜூன்-ஜூலை),
இந்தியாவில் பருவ மழை நன்கு பெய்தது. இதன் விளைவாக, இந்தியாவின் நெல்
உற்பத்தி, சாதனை அளவாக, 10.43 கோடி டன்னை எட்டியது. இதனால், நடப்பாண்டில்,
இதுவரையிலுமாக, இந்தியாவின் அரிசி ஏற்றுமதி, 17.50 லட்சம் டன் உயர்ந்து,
97.50 லட்சம் டன்னாக அதிகரித்துள்ளது.இதைத் தொடர்ந்து, வியட்நாம் (70
லட்சம் டன்), தாய்லாந்து (65 லட்சம் டன்), பாகிஸ்தான் (37.50 லட்சம் டன்),
அமெரிக்கா (35 லட்சம் டன்) ஆகிய நாடுகள் உள்ளன.நடப்பாண்டில், சர்வதேச அரிசி
ஏற்றுமதி, 18.50 லட்சம் டன் உயர்ந்து, 3.77 கோடி டன்னாக அதிகரிக்கும் என,
மதிப்பிடப்பட்டுள்ளது. இதில், இந்தியாவின் பங்களிப்பு அதிக அளவில்
இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இதே ஆண்டில், சர்வதேச அரிசி
உற்பத்தி, 46.48 கோடி டன் என்ற அளவில் இருக்கும் என, அமெரிக்க வேளாண் துறை
மதிப்பீடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|