பதிவு செய்த நாள்
31 அக்2012
01:53
புதுடில்லி:
நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, 25 கோடி
டன்னாக இருக்கும் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: சென்ற செப்டம்பர் மாதத்துடன்
நிறைவடைந்த கரீப் பருவத்தில், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும்
ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், பருவ மழை குறைந்ததுடன், ஒரு சில பகுதிகளில்,
வறட்சி நிலை காணப்பட்டது. இதனால், கரீப் பருவத்தில், தானிய உற்பத்தி
குறையும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, கரீப் பருவத்தில், தானிய
உற்பத்தி,
10 சதவீதம் குறைந்து, 11.72 கோடி டன்னாக சரிவடையும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரபி பருவத்தில், நாட்டின் பல
பாகங்களில், பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால், நடப்பு 2012-13ம்
வேளாண் பருவத்தில், தானிய உற்பத்தி 25 கோடி டன்னாக இருக்கும்.கடந்த 2011-12ம் பருவத்தில் (ஜூலை -
ஜூன்), நாட்டின் தானிய உற்பத்தி, இதுவரை இல்லாத அளவிற்கு, 25.74 கோடி
டன்னாக மிகவும் அதிகரித்திருந்தது. குறிப்பாக, நெல் மற்றும் கோதுமை
உற்பத்தி அதிகரித்திருந்தது.
தற்போதைய மதிப்பீட்டின் படி, நடப்பு பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி,
கடந்த வேளாண் பருவத்தை விட, 3 சதவீதம் மட்டுமே குறைந்து, 25 கோடி டன்னாக
இருக்கும் என, தெரிகிறது. இதுவரை, ஒரு கோடி டன் அரிசியும், 30 லட்சம் டன்
கோதுமையும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சரத் பவார் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|