பரஸ்பர நிதி முகவர் கட்டணம் 80 சதவீதம் குறைகிறதுபரஸ்பர நிதி முகவர் கட்டணம் 80 சதவீதம் குறைகிறது ... ரேஷன் பொருட்களை நிறுத்த திட்டமில்லை ரேஷன் பொருட்களை நிறுத்த திட்டமில்லை ...
நாட்டின் தானிய உற்பத்தி 25 கோடி டன்னாக இருக்கும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2012
01:53

புதுடில்லி: நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, 25 கோடி டன்னாக இருக்கும் என, மத்திய வேளாண் அமைச்சர் சரத் பவார் தெரிவித்தார்.இதுகுறித்து, அவர் மேலும் கூறியதாவது: சென்ற செப்டம்பர் மாதத்துடன் நிறைவடைந்த கரீப் பருவத்தில், கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில், பருவ மழை குறைந்ததுடன், ஒரு சில பகுதிகளில், வறட்சி நிலை காணப்பட்டது. இதனால், கரீப் பருவத்தில், தானிய உற்பத்தி குறையும் என, மதிப்பிடப்பட்டிருந்தது. குறிப்பாக, கரீப் பருவத்தில், தானிய உற்பத்தி,
10 சதவீதம் குறைந்து, 11.72 கோடி டன்னாக சரிவடையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ரபி பருவத்தில், நாட்டின் பல பாகங்களில், பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால், நடப்பு 2012-13ம் வேளாண் பருவத்தில், தானிய உற்பத்தி 25 கோடி டன்னாக இருக்கும்.கடந்த 2011-12ம் பருவத்தில் (ஜூலை - ஜூன்), நாட்டின் தானிய உற்பத்தி, இதுவரை இல்லாத அளவிற்கு, 25.74 கோடி டன்னாக மிகவும் அதிகரித்திருந்தது. குறிப்பாக, நெல் மற்றும் கோதுமை உற்பத்தி அதிகரித்திருந்தது.

தற்போதைய மதிப்பீட்டின் படி, நடப்பு பருவத்தில், நாட்டின் தானிய உற்பத்தி, கடந்த வேளாண் பருவத்தை விட, 3 சதவீதம் மட்டுமே குறைந்து, 25 கோடி டன்னாக இருக்கும் என, தெரிகிறது. இதுவரை, ஒரு கோடி டன் அரிசியும், 30 லட்சம் டன் கோதுமையும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு சரத் பவார் கூறினார்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)