ரேஷன் பொருட்களை நிறுத்த திட்டமில்லைரேஷன் பொருட்களை நிறுத்த திட்டமில்லை ... மல்லிகையின் விலை கிலோவுக்கு ரூ.150 மல்லிகையின் விலை கிலோவுக்கு ரூ.150 ...
சீனாவின் அதிக உற்பத்தியால் மிளகாய் ஏற்றுமதி குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2012
02:02

கொச்சி: நடப்பாண்டில், நாட்டின் மிளகாய் ஏற்றுமதி மிகவும் குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டிலிருந்து, மிக அதிக அளவில், மிளகாயை இறக்குமதி செய்து வரும் சீனாவில், இவ்வாண்டு, மிளகாய் உற்பத்தி நல்ல அளவில் உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, நாட்டின் ஒட்டுமொத்த மிளகாய் ஏற்றுமதியில், சரிவு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த பல ஆண்டுகளாக, சீனா, நம் நாட்டிலிருந்து, மிக அதிகளவில் மிளகாயை இறக்குமதி செய்து கொள்கிறது.

நாட்டின் மொத்த மிளகாய் ஏற்றுமதியில், சீனாவின் பங்களிப்பு மிகவும் அதிகமாகும்.இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு நிதியாண்டின், ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், மிளகாய் ஏற்றுமதி, 1.05 லட்சம் டன்னாக உள்ளது. இது, கடந்த ஆண்டு ஏற்றுமதியை விட, 82 சதவீதம் அதிகமாகும். மேற்கண்ட மொத்த ஏற்றுமதியில், சீன நாட்டின் பங்களிப்பு, 70 ஆயிரம் - 80 ஆயிரம் டன்னாகும்.சீனாவில் மிளகாய் உற்பத்தி உயரும் நிலையில், அது சர்வதேச சந்தையில், இந்தியாவிற்கு போட்டியாக இருக்கும். சீனாவில், இவ்வாண்டு, மிளகாய்
உற்பத்தி 5 லட்சம் டன்னாக இருக்கும் என, கூறப்படுகிறது.சீனா, குறைந்த விலையில், மிளகாய் ஏற்றுமதி செய்யும் நிலையில், அது, இந்திய மிளகாய் ஏற்றுமதியாளர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மிளகாய் ஏற்றுமதி மூலம், நம் நாட்டிற்கு, தற்போது, 2,000 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி கிடைக்கிறது.இச்சூழ்நிலையில், நடப்பாண்டு, இந்தியாவில், மிளகாய் உற்பத்தி குறையும் என்ற மதிப்பீடும் உள்ளது. இதற்கு, உள்நாட்டில், அதிக அளவில் மிளகாய் சாகுபடி செய்யப்படும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மிளகாய் சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டை விட, 20-30 சதவீதம் குறைந்திருக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டில், மிளகாய்க்கான தேவை அதிகரித்து வருகிறது.

இருப்பினும், ஆந்திராவில், குளிர் சாதன கிடங்குகளில், 30 லட்சம் மூட்டைகள் (ஒரு மூட்டை = 40 கிலோ) கையிருப்பில் உள்ளன. எனவே, இதன் விலை உயர வாய்ப்பில்லை என, மிளகாய் வர்த்தகர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, ஒரு கிலோ மிளகாய் விலை மிகவும் அதிகபட்சமாக, 80-90 ரூபாய் வரை அதிகரித்து காணப்பட்டது. ஆனால், தற்போது, இதன் விலை, 50-55 ரூபாய் என்ற அளவில் நிலையாக உள்ளது என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)