பதிவு செய்த நாள்
31 அக்2012
02:02
கொச்சி:
நடப்பாண்டில், நாட்டின் மிளகாய் ஏற்றுமதி மிகவும் குறையும் என,
எதிர்பார்க்கப்படுகிறது. நம் நாட்டிலிருந்து, மிக அதிக அளவில், மிளகாயை
இறக்குமதி செய்து வரும் சீனாவில், இவ்வாண்டு, மிளகாய் உற்பத்தி நல்ல அளவில்
உயரும் என, மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே, நாட்டின் ஒட்டுமொத்த
மிளகாய் ஏற்றுமதியில், சரிவு ஏற்படும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.கடந்த பல
ஆண்டுகளாக, சீனா, நம் நாட்டிலிருந்து, மிக அதிகளவில் மிளகாயை இறக்குமதி
செய்து கொள்கிறது.
நாட்டின் மொத்த மிளகாய் ஏற்றுமதியில், சீனாவின்
பங்களிப்பு மிகவும் அதிகமாகும்.இதற்கு எடுத்துக்காட்டாக, நடப்பு
நிதியாண்டின், ஜூலை வரையிலான நான்கு மாத காலத்தில், மிளகாய் ஏற்றுமதி, 1.05
லட்சம் டன்னாக உள்ளது. இது, கடந்த ஆண்டு ஏற்றுமதியை விட, 82 சதவீதம்
அதிகமாகும். மேற்கண்ட மொத்த ஏற்றுமதியில், சீன நாட்டின் பங்களிப்பு, 70
ஆயிரம் - 80 ஆயிரம் டன்னாகும்.சீனாவில் மிளகாய் உற்பத்தி உயரும் நிலையில்,
அது சர்வதேச சந்தையில், இந்தியாவிற்கு போட்டியாக இருக்கும். சீனாவில்,
இவ்வாண்டு, மிளகாய்
உற்பத்தி 5 லட்சம் டன்னாக இருக்கும் என, கூறப்படுகிறது.சீனா, குறைந்த
விலையில், மிளகாய் ஏற்றுமதி செய்யும் நிலையில், அது, இந்திய மிளகாய்
ஏற்றுமதியாளர்களுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மிளகாய் ஏற்றுமதி மூலம்,
நம் நாட்டிற்கு, தற்போது, 2,000 கோடி ரூபாய் அன்னியச் செலாவணி
கிடைக்கிறது.இச்சூழ்நிலையில், நடப்பாண்டு, இந்தியாவில், மிளகாய் உற்பத்தி
குறையும் என்ற மதிப்பீடும் உள்ளது. இதற்கு, உள்நாட்டில், அதிக அளவில்
மிளகாய் சாகுபடி செய்யப்படும், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் மிளகாய்
சாகுபடி பரப்பளவு, கடந்த ஆண்டை விட, 20-30 சதவீதம் குறைந்திருக்கும் என,
மதிப்பிடப்பட்டுள்ளது. உள்நாட்டில், மிளகாய்க்கான தேவை அதிகரித்து
வருகிறது.
இருப்பினும், ஆந்திராவில், குளிர் சாதன கிடங்குகளில், 30 லட்சம் மூட்டைகள்
(ஒரு மூட்டை = 40 கிலோ) கையிருப்பில் உள்ளன. எனவே, இதன் விலை உயர
வாய்ப்பில்லை என, மிளகாய் வர்த்தகர்கள் தெரிவித்தனர். கடந்த ஆண்டு, ஒரு
கிலோ மிளகாய் விலை மிகவும் அதிகபட்சமாக, 80-90 ரூபாய் வரை அதிகரித்து
காணப்பட்டது. ஆனால், தற்போது, இதன் விலை, 50-55 ரூபாய் என்ற அளவில் நிலையாக
உள்ளது என, ஏற்றுமதியாளர்கள் தெரிவித்தனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|